Newsஆஸ்திரேலியாவுக்கு எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் - 63 ஆண்டுகளாகியும்...

ஆஸ்திரேலியாவுக்கு எலிசபெத் கைப்பட எழுதிய ரகசிய கடிதம் – 63 ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை

-

இங்கிலாந்தின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தனது கைப்பட ஆஸ்திரேலியா நாட்டுக்கு ரகசிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பரில் இந்த கடிதம் எழுதியுள்ளார். அதில், சிட்னி நகர மக்களின் முகவரியை குறிப்பிட்டு அனுப்பியுள்ளார்.

எனினும், இந்த கடிதம் சிட்னி நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் ஒன்றில் விலை மதிப்புடைய பொருட்களை வைக்க கூடிய அறையில் வைத்து பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி செவன் நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ராணியின் தனிப்பட்ட ஊழியர் உள்பட ஒருவருக்கும் அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது பற்றி தெரியாது.

ஏனெனில் அந்த கடிதம் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு விசயம் நிச்சயம். 2085-ம் ஆண்டு வரை அதனை திறந்து பார்க்க முடியாது. ஏனெனில், அந்த கடிதத்தில் சிட்னி நகர மேயரை குறிப்பிட்டு, வருகிற 2085-ம் ஆண்டு, நீங்கள் தேர்வு செய்ய கூடிய ஒரு நல்ல நாளில், தயவு கூர்ந்து இதனை திறக்கவும்.

அதில் உள்ள எனது செய்தியை சிட்னி நகர மக்களுக்கு தெரிவிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் எலிசபெத் ஆர் என எளிமையான முறையில் கையெழுத்து இடப்பட்டு உள்ளது.

Latest news

புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சமூகத்திற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தர வதிவிடம்

கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளான Tuvalu-இன் முதல் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்ற அரசாங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. Tuvalu மற்றும்...

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...

தேசிய கீதம் தொடர்பாக வடகிழக்கு மாநிலப் பள்ளிகளுக்கான புதிய சட்டம்

வடக்குப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளும் கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கும் புதிய அரசாங்கக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. CLP...

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபலமான இசை விழாவில் மாத்திரை பரிசோதனை

ஆஸ்திரேலியாவில் பிரபலமான இசை விழாவான Laneway விழாவில் முதல் முறையாக மாத்திரை பரிசோதனை (Pill Testing) வசதிகளை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு...

உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய எலினா ரைபாகினா

2026 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு, கஜகஸ்தானின் Elena Rybakina உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். மெல்பேர்ணின் ராட் லேவர் அரங்கில் நடைபெற்ற...

நிபா காரணமாக ஆஸ்திரேலியா மீண்டும் ஊரடங்கு உத்தரவில் சிக்குமா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து நிபா வைரஸ் பரவியதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா உட்பட உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள், கோவிட்-19 தொற்றுநோயை விட...