Newsபூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

பூமியில் இருந்தபடியே நிலாவில் தங்கலாம் விரைவில்

-

பூமியிலேயே நிலாவில் தங்க வாய்ப்பளிக்கக்கூடிய திட்டம் டுபாயில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அது குறித்து Arabian Business எனும் வர்த்தகச் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டது. கனடியக் கட்டடக் கலை நிறுவனமான Moon World Resorts 5 பில்லியன் டொலர் மதிப்புமிக்கத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

நிலாவின் தோற்றத்தில் அமையக்கூடிய அந்த உல்லாசத் தலம் விண்வெளிச் சுற்றுப்பயணத் தலமாகவும் விளங்கும் என்று கூறப்படுகிறது. விண்வெளி ஆய்வு நிலையங்கள் பயிற்சி நடத்துவதற்கும் வசதிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

உல்லாசத் தலத்திற்குச் செல்லும் வருகையாளர்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், இரவுக் கேளிக்கைக் கூடம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.

உல்லாசத் தலத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியும் கட்டப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 2.5 மில்லியன் வருகையாளர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நிலாவின் தோற்றத்தைக் கொண்ட உல்லாசத் தலத்தை மற்ற இடங்களிலும் கட்ட Moon World Resorts எண்ணம் கொண்டுள்ளது. அதுகுறித்து உலகக் கண்காட்சி ஒன்றை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Latest news

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

விக்டோரியா காட்டுத்தீயில் 400 வீடுகள் எரிந்து நாசம்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, உயிருக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மாநில வரலாற்றில் மிக அதிக வெப்ப அலைக்குப் பிறகும் நிலைமை...