Newsஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை கிரிக்கெட் அணி

-

ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பையின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இதில், நாணய சுழற்சியல் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா, மெண்டீஸ் ஆகியோர் களமிறங்கினர். ஓட்டம் எதுவும் எடுக்காமலேயே மெண்டீஸும் 8 ஓட்டங்களில் நிஷங்காவும் ஆட்டமிழந்தனர்.

தனஞ்செயா டி சில்வா 28 ஓட்டங்களில் ஆட்டம் இழந்த நிலையில், குணாதிலக, ஷனகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், 58 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இலங்கை அணி பின் தங்கிய நிலையில் இருந்தது. எனினும் அடுத்ததாக களம் இறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடியாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்த போது ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 170 ரன்கள் எடுத்தது.

171 ஓட்டங்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மதுஷன் பந்துவீச்சில் பாபர் அசாம் 5 ரன்களிலும் ஃபக்ஹர் ஜமான் ரன்கள் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 22 ரன்களுக்கு 2 விக்கெட் என பாகிஸ்தான் நெருக்கடிக்கு உள்ளானது. எனினும், முகமது ரிஸ்வான் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். 47 பந்துகளில் அரை சதம் கடந்த ரிஸ்வான் அடுத்த பந்திலேயே பிடி கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

ஹசரங்கா ஒரே ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்தி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் விக்கெட் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் விமானங்களில் Power Banks-ஐ எடுத்துச் செல்ல தடை

டிசம்பர் முதல் பல புதிய விமானப் பயண விதிகள் அமலுக்கு வரும் என்றும், இது ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விர்ஜின், குவாண்டாஸ்...