Newsஇலங்கை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளுக்கு அமோக வரவேற்பு

இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளுக்கு அமோக வரவேற்பு

-

ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன அணிவகுப்பில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 12ஆவது ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டியில் 63க்கு 53 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இந்நிலையில், இன்று காலை நாட்டை வந்தடைந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய சிறு குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஆசியாவின் கிரிக்கட் கிங்ஸ் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி நாட்டிற்கு வருகைத்தந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 15ஆவது ஆசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து இலங்கை வீரர்கள் சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தனர்.

இலங்கை வருவதற்காக டுபாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தசுன் ஷானக தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆறு மணித்தியால விமான பயணத்தின் பின்னர் நாட்டை வந்தடைந்த ஆசிய கிரிக்கட் வீரர்களை வரவேற்கும் வகையில் விளையாட்டு அமைச்சும் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இணைந்து விசேட நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

Latest news

Parent visas தொடர்பில் பீட்டர் டட்டன் வெளியிட்டுள்ள செய்தி

கூட்டணி அரசாங்கம் வருடாந்திர Parent visa-களின் எண்ணிக்கையைக் குறைக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார். நிரந்தர குடியேறிகளின் வருடாந்திர உட்கொள்ளலை 180,000 இலிருந்து 135,000...

கோகோயின் விநியோகித்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி – விதிக்கப்பட்ட கடும் அபராதம்

தெற்கு ஆஸ்திரேலிய லிபரல் கட்சித் தலைவர் David Spears-இற்கு இரண்டு பேருக்கு கோகைன் வழங்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அவருக்கு $9,000 அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 40 வயதான...

NSW-வில் மதுபானக் கடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகள்

இந்த Anzac தினத்தை முன்னிட்டு நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் கடுமையான சில்லறை விற்பனைக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும். மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்பட வேண்டும் என்று...

இன்று முதல் இரண்டு ஆஸ்திரேலிய மாநிலங்களில் ஏற்படவுள்ள வானிலை மாற்றங்கள்

விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் இன்று முதல் வார இறுதி வரை குளிர்ந்த வானிலை எதிர்பார்க்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வார...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய பிரபல கார் நிறுவனம்

ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதாக ஒரு பிரபல கார் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மோசடி மற்றும் பிற பிழைகள் தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்களைப்...

NSW-வில் மதுபானக் கடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகள்

இந்த Anzac தினத்தை முன்னிட்டு நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் கடுமையான சில்லறை விற்பனைக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும். மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்பட வேண்டும் என்று...