Newsஇலங்கை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளுக்கு அமோக வரவேற்பு

இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளுக்கு அமோக வரவேற்பு

-

ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விசேட வாகன அணிவகுப்பில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 12ஆவது ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டியில் 63க்கு 53 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இந்நிலையில், இன்று காலை நாட்டை வந்தடைந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க மற்றும் விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள், இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய சிறு குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஆசியாவின் கிரிக்கட் கிங்ஸ் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி நாட்டிற்கு வருகைத்தந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 15ஆவது ஆசிய சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்களால் தோற்கடித்து இலங்கை வீரர்கள் சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தனர்.

இலங்கை வருவதற்காக டுபாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தசுன் ஷானக தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏறக்குறைய ஆறு மணித்தியால விமான பயணத்தின் பின்னர் நாட்டை வந்தடைந்த ஆசிய கிரிக்கட் வீரர்களை வரவேற்கும் வகையில் விளையாட்டு அமைச்சும் இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இணைந்து விசேட நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம் அதன் நகராட்சி மன்றங்களில் பெண்களின் தலைமையை அதிகரிக்க தொடர்ச்சியான புதிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் நகராட்சி மன்றங்களில் 50% கவுன்சில் தலைமைப்...

சர்வதேச முதலீட்டை நோக்கித் திரும்பும் ஆஸ்திரேலிய வணிக ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியாவில் நன்கு அறியப்பட்ட சொத்து முதலீட்டாளரான Scott O’Neill, நியூசிலாந்தில் தனது புதிய முதலீடுகளைச் செய்யத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலிய சொத்துச் சந்தையில் விலை உயர்வு/வட்டி விகிதங்கள்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

ஆஸ்திரேலியாவிற்கு குறைந்த விலை பொருட்களை வழங்கும் ஒரு கனேடிய நிறுவனம்

கனேடிய தள்ளுபடி சில்லறை விற்பனையாளர் Dollarama, ஆஸ்திரேலிய சங்கிலித் தொடர் நிறுவனமான The Reject Shop-ஐ கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் $259 மில்லியன் மதிப்புடையது, மேலும்...