Breaking Newsஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

-

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக, ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் சார்பில், “Study ஆஸ்திரேலியா” என்ற கல்வி கண்காட்சி, சென்னை, வேளச்சேரியில் உள்ள உணவு விடுதியில் நடந்தது.

அதில், ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாட்டுக்குப் பின், ஆஸ்திரேலியாவில் உயர்கல்விக்கான சூழல் மிகவும் உகந்ததாக உள்ளது.

பொதுவாகவே ஆஸ்திரேலியா பலவகை கலாச்சாரத்துக்கு உட்பட்ட நாடு. அங்கு இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வகையில், 1,200க்கும் மேற்பட்ட படிப்புகள் அங்கு உள்ளன.

மற்ற மேற்கு நாடுகளை விட குறைந்த செலவிலும், உதவித் தொகையுடனும் இந்திய மாணவர்கள் அங்கு கற்கலாம். அதற்கான வாய்ப்பு தற்போது கனிந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://www.studyaustralia.gov.au/india என்ற இணையதளத்தைக் காணலாம் இவ்வாறு அவர் பேசினார்.

Latest news

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...

ஆஸ்திரேலிய பாதாள உலகத் தலைவர் ஈராக்கில் கைது

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்...

ஆஸ்திரேலியா முழுவதும் அமேசானுக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

பில்லியனர் ஜெஃப் பெசோஸின் அமேசானுக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு பெரிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை அமேசான் சுரண்டுவதையும் உள்ளூர் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும்...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...