Breaking Newsஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு வாய்ப்பு!

-

ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி கற்க இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதாக, ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அரசின் சார்பில், “Study ஆஸ்திரேலியா” என்ற கல்வி கண்காட்சி, சென்னை, வேளச்சேரியில் உள்ள உணவு விடுதியில் நடந்தது.

அதில், ஆஸ்திரேலியாவுக்கான தெற்காசிய வர்த்த, முதலீட்டு ஆணையாளர் அப்துல் எக்ராம் கூறியதாவது:கொரோனா கட்டுப்பாட்டுக்குப் பின், ஆஸ்திரேலியாவில் உயர்கல்விக்கான சூழல் மிகவும் உகந்ததாக உள்ளது.

பொதுவாகவே ஆஸ்திரேலியா பலவகை கலாச்சாரத்துக்கு உட்பட்ட நாடு. அங்கு இந்தியர்கள் அதிகளவில் உள்ளனர். இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் வகையில், 1,200க்கும் மேற்பட்ட படிப்புகள் அங்கு உள்ளன.

மற்ற மேற்கு நாடுகளை விட குறைந்த செலவிலும், உதவித் தொகையுடனும் இந்திய மாணவர்கள் அங்கு கற்கலாம். அதற்கான வாய்ப்பு தற்போது கனிந்துள்ளது. மேலும் விபரங்களுக்கு, https://www.studyaustralia.gov.au/india என்ற இணையதளத்தைக் காணலாம் இவ்வாறு அவர் பேசினார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...