Newsநியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்திற்கு செல்லும் இலங்கையின் மோசமான நிலை!

-

சிட்னியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கும் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நிலைமையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் செயற்பாட்டாளர்களை ஒடுக்க தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து இலங்கை சமூகம் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தது.

பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் குறித்து நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் அடங்கிய அறிக்கை உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அடுத்த பாராளுமன்ற அமர்வில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிட்னியில் உள்ள இலங்கை சமூகமும் இலங்கையின் நிலைமை தொடர்பில் நேரடியான தலையீடுகளை கோரியுள்ளது.

மாநில அரசு மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் முழு அர்ப்பணிப்பை அளிப்பதாக உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சந்திக்க சிட்னி இலங்கை சமூகம் தயாராகி வருகின்றது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...