Newsஆஸ்திரேலிய மருத்துவமனை தொடர்பில் வெளிவந்த சர்ச்சைக்குரிய அறிக்கை

ஆஸ்திரேலிய மருத்துவமனை தொடர்பில் வெளிவந்த சர்ச்சைக்குரிய அறிக்கை

-

ஆஸ்திரேலியாவின் முக்கிய மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

குயின்ஸ்லாந்தில் உள்ள மேக்கே அடிப்படை மருத்துவமனை தொடர்பாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நோயாளர் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளினால் 03 சிசுக்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு பெண் நிரந்தர உடல் ஊனமுற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாநில சுகாதார அமைச்சர் Yvette D’Ath இந்த அறிக்கையை வெளியிடும் போது இது போன்ற ஒரு விஷயத்தை எந்த குடும்பமும் அனுபவிக்கக்கூடாது என்று ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் 26 தாய்மார்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவாகவே பெற்றுள்ளனர் என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபரில் மேக்கே அடிப்படை மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து கருத்து தெரிவிக்க ஊழியர்கள் தயாராக இருந்தபோதிலும், மருத்துவமனை நிர்வாகம் அதைச் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அறிக்கை ஜூலை 1, 2019 முதல் ஒக்டோபர் 31, 2021 வரையிலான காலத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...