Breaking Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtelஇன் துணை நிறுவனத்தில் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது.

Singtel நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஊடுருவப்படுவது இது இரண்டாம் முறையாகும். அதன் தொடர்பில், Singtel நிறுவனத்தை இலக்காகக் கொண்டு அதன் மீது இணையத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

Singtel இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் Dialog எனும் தகவல்தொடர்புச் சேவை ஆலோசனை நிறுவனத்தை வாங்கியது. Dialog ஊடுருவப்பட்டதில் 20க்கும் குறைவான வாடிக்கையாளர்களும் சுமார் 1,000 தற்போதைய, முன்னாள் ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற மாதம் 10ஆம் தேதியன்றும் இம்மாதம் 7ஆம் தேதியன்றும் ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றன. அதில் Dialog நிறுவனத்தின் தரவுகளில் சிறிதளவு ஊடுருவப்பட்டு Dark Web எனும் ரகசிய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

Singtel நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமான ஆஸ்திரேலியாவின் Optus நிறுவனமும் இணையத்தாக்குதலால் பாதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வரலாற்றில் இடம்பெற்ற ஆகப் பெரிய ஊடுருவல் சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டன.

Latest news

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு புதிய கிரகத்தை ஆஸ்திரேலிய வானியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் புல்டோசர் விபத்தில் உயிரிழந்துள்ளார். துறைமுக வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு புல்டோசர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...