Breaking Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtelஇன் துணை நிறுவனத்தில் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது.

Singtel நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஊடுருவப்படுவது இது இரண்டாம் முறையாகும். அதன் தொடர்பில், Singtel நிறுவனத்தை இலக்காகக் கொண்டு அதன் மீது இணையத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

Singtel இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் Dialog எனும் தகவல்தொடர்புச் சேவை ஆலோசனை நிறுவனத்தை வாங்கியது. Dialog ஊடுருவப்பட்டதில் 20க்கும் குறைவான வாடிக்கையாளர்களும் சுமார் 1,000 தற்போதைய, முன்னாள் ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற மாதம் 10ஆம் தேதியன்றும் இம்மாதம் 7ஆம் தேதியன்றும் ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றன. அதில் Dialog நிறுவனத்தின் தரவுகளில் சிறிதளவு ஊடுருவப்பட்டு Dark Web எனும் ரகசிய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

Singtel நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமான ஆஸ்திரேலியாவின் Optus நிறுவனமும் இணையத்தாக்குதலால் பாதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வரலாற்றில் இடம்பெற்ற ஆகப் பெரிய ஊடுருவல் சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டன.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...