Breaking Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

-

ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtelஇன் துணை நிறுவனத்தில் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது.

Singtel நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஊடுருவப்படுவது இது இரண்டாம் முறையாகும். அதன் தொடர்பில், Singtel நிறுவனத்தை இலக்காகக் கொண்டு அதன் மீது இணையத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

Singtel இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் Dialog எனும் தகவல்தொடர்புச் சேவை ஆலோசனை நிறுவனத்தை வாங்கியது. Dialog ஊடுருவப்பட்டதில் 20க்கும் குறைவான வாடிக்கையாளர்களும் சுமார் 1,000 தற்போதைய, முன்னாள் ஊழியர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

சென்ற மாதம் 10ஆம் தேதியன்றும் இம்மாதம் 7ஆம் தேதியன்றும் ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றன. அதில் Dialog நிறுவனத்தின் தரவுகளில் சிறிதளவு ஊடுருவப்பட்டு Dark Web எனும் ரகசிய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

Singtel நிறுவனத்தின் இன்னொரு துணை நிறுவனமான ஆஸ்திரேலியாவின் Optus நிறுவனமும் இணையத்தாக்குதலால் பாதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வரலாற்றில் இடம்பெற்ற ஆகப் பெரிய ஊடுருவல் சம்பவங்களில் அதுவும் ஒன்று. அதில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டன.

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...