Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் 03 வருடங்களில் விமான டிக்கெட் கட்டணம் 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு கோவிட் நிலைமை வருவதற்கு முன்பு, கோடைகால விமானங்களில் டிக்கெட்டின் சராசரி கட்டணம் 1362 டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 1817 டொலராக உயர்ந்துள்ளது.

இது மெல்போர்னிலிருந்து புது டெல்லி, சிட்னியில் இருந்து டென்பசார் – மெல்போர்னில் இருந்து டென்பசார் – சிட்னியில் இருந்து ஹோ சி மின் மற்றும் சிட்னியில் இருந்து மணிலா செல்லும் விமானங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டண அதிகரிப்பாகும்.

ஏறக்குறைய அனைத்து கோவிட் விதிமுறைகளும் நீக்கப்பட்டதால், இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் விடுமுறைக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் 164 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மெல்போர்ன் மற்றும் சிட்னியில் இருந்து குறிப்பாக டெல்லி – பேங்கொக் – சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளுக்கான டிக்கெட் முன்பதிவு இம்முறை கணிசமாக அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...