Newsஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான விமான முன்பதிவு 164 சதவீதம் அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் 03 வருடங்களில் விமான டிக்கெட் கட்டணம் 33 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2019 ஆம் ஆண்டு கோவிட் நிலைமை வருவதற்கு முன்பு, கோடைகால விமானங்களில் டிக்கெட்டின் சராசரி கட்டணம் 1362 டொலர்களாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 1817 டொலராக உயர்ந்துள்ளது.

இது மெல்போர்னிலிருந்து புது டெல்லி, சிட்னியில் இருந்து டென்பசார் – மெல்போர்னில் இருந்து டென்பசார் – சிட்னியில் இருந்து ஹோ சி மின் மற்றும் சிட்னியில் இருந்து மணிலா செல்லும் விமானங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டண அதிகரிப்பாகும்.

ஏறக்குறைய அனைத்து கோவிட் விதிமுறைகளும் நீக்கப்பட்டதால், இந்த கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் விடுமுறைக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களின் சதவீதம் 164 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மெல்போர்ன் மற்றும் சிட்னியில் இருந்து குறிப்பாக டெல்லி – பேங்கொக் – சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளுக்கான டிக்கெட் முன்பதிவு இம்முறை கணிசமாக அதிகரித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...