Newsஉக்ரைனில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா படை? போர் மேலும் தீவிரமடையும் அபாயம்

உக்ரைனில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா படை? போர் மேலும் தீவிரமடையும் அபாயம்

-

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி படையெடுத்து 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லொரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால், அந்தத் தீவுடன் ரஷ்யாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்தனர்.

மேலும், ரஷ்யாவுடனான போரில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கவோ சரணடையவோ போவதில்லை. தொடர்ந்து போரிடுவோம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ‘உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு போர் பயிற்சி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...