Newsஉக்ரைனில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா படை? போர் மேலும் தீவிரமடையும் அபாயம்

உக்ரைனில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலியா படை? போர் மேலும் தீவிரமடையும் அபாயம்

-

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி படையெடுத்து 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லொரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால், அந்தத் தீவுடன் ரஷ்யாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்தனர்.

மேலும், ரஷ்யாவுடனான போரில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கவோ சரணடையவோ போவதில்லை. தொடர்ந்து போரிடுவோம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் படையினருக்கு இராணுவப் பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ‘உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு போர் பயிற்சி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...