Newsஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

-

ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 28 வயதான இந்திய பட்டதாரி மாணவர் சுபம் கார்க் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் திகதி அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 11 முறை கத்தியால் குத்தியதில் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவைச் சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர், கடந்த 7 நாள்களாக, ஆஸ்திரேலியா செல்ல விசா பெற முயன்றும் இதுவரை எந்த பலனும் இல்லை.

சுபம் கார்க், சென்னை ஐஐடியில் முதுகலை பட்டம் பெற்று, கடந்த செப்டம்பர் முதலாம் திகதிதான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சுபம் குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், முகம், நெஞ்சுப் பகுதி மற்றும் வயிறு என 11 இடங்களில் மிகமோசமான கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதில் தொடர்புடைய 27 வயது நபர் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...