Newsஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயரம்!

-

ஆஸ்திரேலியாவில், சிட்னியில் அமைந்துள்ள நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 28 வயதான இந்திய பட்டதாரி மாணவர் சுபம் கார்க் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் திகதி அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 11 முறை கத்தியால் குத்தியதில் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவைச் சேர்ந்த சுபம் கார்க்கின் பெற்றோர், கடந்த 7 நாள்களாக, ஆஸ்திரேலியா செல்ல விசா பெற முயன்றும் இதுவரை எந்த பலனும் இல்லை.

சுபம் கார்க், சென்னை ஐஐடியில் முதுகலை பட்டம் பெற்று, கடந்த செப்டம்பர் முதலாம் திகதிதான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

சுபம் குறித்து அவரது பெற்றோர் கூறுகையில், முகம், நெஞ்சுப் பகுதி மற்றும் வயிறு என 11 இடங்களில் மிகமோசமான கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதில் தொடர்புடைய 27 வயது நபர் கைது செய்யப்பட்டு, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...