Newsகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

-

கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டார்ஹாம் பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ தமிழ் வட்டாரங்களின் தகவலின் படி உயிரிழந்தவர் அருண் விக்னேஸ்வரராஜா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும் தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அஜாக்ஸ் (Ajax) என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்கஸ்ரில் அருந்தகத்துக்கு (King’s Castle Bar and Grill) வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பிவிட்டார் என்றும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரெறென்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருண் விக்னேஸ்வரராஜா அங்கு பின்னர் உயிரிழந்தார். அவரை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைப் பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை.

கத்தி வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற அதேநேரத்தில் அருந்தகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் சாரதி ஒருவர் தனது காரை வேகமாகச் செலுத்தி நபர் ஒருவரை மோதிப்படுகாயப்படுத்தியுள்ளார்.

அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். படுகாயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாக

டார்ஹாம் பிராந்தியப் பொலிஸ் தெரிவித்துள்ளது. சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Latest news

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட புதிய வரிகள் அறிமுகம்

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

தொடரும் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தேடும் பணி

பெர்த்தில் புயல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முந்தினம் மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் குழுவினால்...