Newsகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

கனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்

-

கனடா ஒன்ராறியோவில் டார்ஹாம் (Durham) பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அருந்தகம் ஒன்றுக்கு வெளியே 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி வெள்ளி – சனி நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டார்ஹாம் பொலிஸ் தெரிவித்துள்ளது.

ஒன்ராறியோ தமிழ் வட்டாரங்களின் தகவலின் படி உயிரிழந்தவர் அருண் விக்னேஸ்வரராஜா என அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.

இவர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்றும் தமிழ்த் தேசிய விளையாட்டு அணிகளில் துடிப்புடன் பங்குபற்றி வந்தவர் எனவும் தமிழ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அஜாக்ஸ் (Ajax) என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்கஸ்ரில் அருந்தகத்துக்கு (King’s Castle Bar and Grill) வெளியே வாகனத் தரிப்பிடத்தில் இருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்களில் ஒருவர் கத்தியை எடுத்து அடுத்தவரைப் பலமாகத் தாக்கிவிட்டு காரில் ஏறித் தப்பிவிட்டார் என்றும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.

கடுமையான வெட்டுக் காயங்களுடன் ரெறென்ரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருண் விக்னேஸ்வரராஜா அங்கு பின்னர் உயிரிழந்தார். அவரை வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற நபரைப் பொலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை.

கத்தி வெட்டுச் சம்பவம் இடம்பெற்ற அதேநேரத்தில் அருந்தகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் சாரதி ஒருவர் தனது காரை வேகமாகச் செலுத்தி நபர் ஒருவரை மோதிப்படுகாயப்படுத்தியுள்ளார்.

அவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். படுகாயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து அறிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாக

டார்ஹாம் பிராந்தியப் பொலிஸ் தெரிவித்துள்ளது. சம்பவங்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Latest news

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு தானம் செய்பவர், உலகளவில் கிட்டத்தட்ட 200 குழந்தைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் பொது...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது. பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய...

Platelets-இன் ஆயுளை நீட்டிக்க ஆஸ்திரேலியா புதிய முறை

உயிர்காக்கும் இரத்தத் தட்டுக்கள் உறைந்த நிலையில் இருந்தாலும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்க உயிர்காக்கும் அமைப்பு ஆகியவற்றுக்கு...

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட பண்டிகை

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகை நேற்று (10) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக்...

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட பண்டிகை

யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப் பண்டிகை நேற்று (10) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியக்...

பூமியை விரைவாக நெருங்கும் வால் நட்சத்திரத்தின் சமீபத்திய படங்கள்

விரைவில் பூமியை நெருங்கவிருக்கும் ஒரு interstellar வால் நட்சத்திரத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மற்றும் Jupiter Icy Moons Explorer ஆகியவற்றால்...