Cinemaமீண்டும் தயாரிப்பாளர் - பூரிப்பில் 'பூங்குழலி' ஐஸ்வர்யா லட்சுமி

மீண்டும் தயாரிப்பாளர் – பூரிப்பில் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி

-

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சமுத்திரகுமாரி ‘பூங்குழலி’ கேரக்டரில் நடித்த மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார்

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், ‘கார்கி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார்.

மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், ” செப்டம்பர் 30-ம் திகதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.

தற்போது ‘அம்மு’ என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று ‘குமாரி’ என்ற மலையாள படமும் வெளியாகிறது. ‘கார்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘குமாரி’ படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து, நடித்திருக்கும் ‘குமாரி’ திரைப்படம் இதுவரை வெளிவராத ஜானர் என்றும், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே எழுந்திருக்கிறது.

‘குமாரி’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உற்சாகத்துடன் தெரிவிக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் பூங்குழலியாக நடித்ததற்கு கிடைத்த வரும் பாராட்டுக்கள் எதிர்பாராதவை என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

‘பூங்குழலி’, ‘அம்மு’, ‘குமாரி’ என ஒரே மாதத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு சக கலைஞர்களும், மூன்று மொழி திரையுலகினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Latest news

Qantas நிறுவனத்திற்கு நீதிமன்றம் விதித்த மிகப்பெரிய அபராதம்

ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத பணிநீக்க வழக்கில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனத்திற்கு 90 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. COVID-19 தொற்றுநோய்களின்...

அல்பானீஸ் கூறிய “Delulu with No Solulu” சொற்றொடரை அகராதியில் சேர்க்க முடிவு

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு slang சொற்றொடரை அகராதியில் சேர்க்கத் தயாராகி வருகிறார். மார்ச் மாதத்தில், எதிர்ப்பைத் தாக்க அல்பானீஸ்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

ஆஸ்திரேலியாவில் உயர்ந்துள்ள நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி

ஆஸ்திரேலியாவின் நாணயம் அல்லாத தங்க ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முக்கிய ஏற்றுமதியாளர் அமெரிக்கா, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு தங்க ஏற்றுமதி $2.9 பில்லியன்...

வேலைகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி நடத்தப்படும் ஆராய்ச்சி

ஆஸ்திரேலியர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடைபெற்று வருகிறது. சமீபத்திய அரசாங்க அறிக்கை ஒன்று, AI தொழில்நுட்பம்...

சிட்னி Golf மைதானத்தில் விமான விபத்து – அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்

சிட்னியில் Golf மைதானத்தில் மோதிய இலகுரக விமானம் ஒன்று சிறு சேதங்களுடன் விபத்துக்குள்ளானது. இதில் சிறிய காயங்களுடன் இருவர்கள் தப்பியுள்ளனர். பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, சிட்னியின் வடக்கு...