Cinemaமீண்டும் தயாரிப்பாளர் - பூரிப்பில் 'பூங்குழலி' ஐஸ்வர்யா லட்சுமி

மீண்டும் தயாரிப்பாளர் – பூரிப்பில் ‘பூங்குழலி’ ஐஸ்வர்யா லட்சுமி

-

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சமுத்திரகுமாரி ‘பூங்குழலி’ கேரக்டரில் நடித்த மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார்

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், ‘கார்கி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார்.

மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், ” செப்டம்பர் 30-ம் திகதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது.

தற்போது ‘அம்மு’ என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகிறது. இதிலும் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறேன்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று ‘குமாரி’ என்ற மலையாள படமும் வெளியாகிறது. ‘கார்கி’ படத்தைத் தொடர்ந்து, ‘குமாரி’ படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்திருக்கிறேன். முப்பது நாட்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், முத்தான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தயாரித்து, நடித்திருக்கும் ‘குமாரி’ திரைப்படம் இதுவரை வெளிவராத ஜானர் என்றும், புராண இதிகாசம் தொடர்புடைய திரில்லர் திரைப்படம் என்றும் தகவல்கள் வெளியாகி இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே எழுந்திருக்கிறது.

‘குமாரி’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உற்சாகத்துடன் தெரிவிக்கும் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான ஐஸ்வர்யா லட்சுமி, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் பூங்குழலியாக நடித்ததற்கு கிடைத்த வரும் பாராட்டுக்கள் எதிர்பாராதவை என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

‘பூங்குழலி’, ‘அம்மு’, ‘குமாரி’ என ஒரே மாதத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து திறமையை வெளிப்படுத்தியிருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு சக கலைஞர்களும், மூன்று மொழி திரையுலகினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Latest news

NSW கடற்கரைகளை அச்சுறுத்திய மர்மமான கருப்பு பந்துகள்

நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு, ரப்பர் போன்ற பந்துகளின் ஆதாரம் தெரியவந்துள்ளது. இந்த மர்மமான கருப்பு பந்துகள் கொழுப்பு அமிலங்கள், பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள், மனித...

Return to Sender என்பது மக்கள் மீது ஒரு சுமையாகும்!

ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் வீட்டின் தபால் பெட்டியில் முந்தைய உரிமையாளர்கள் அல்லது குத்தகைதாரர்களிடமிருந்து அடிக்கடி கடிதங்களைப் பெறுவதால் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுப்புநருக்குத் திரும்புதல் சட்டத்தின்...

Rudd விவாதத்திற்கு மத்தியில் அல்பானீஸின் ஆசிய சுற்றுப்பயண உரையாடல்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஆசியத் தலைவர்களுடனான உயர்மட்ட சந்திப்புகளுக்காக மலேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அல்பானீஸின் வருகை வாரம் முழுவதும் தொடரும், நேற்று அவர் ஒரு ஊடக...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Microsoft Australia

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம், Microsoft Australia மீது நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. Copilot  உள்ளிட்ட விலையுயர்ந்த 365 சந்தா...

மெல்பேர்ணில் டாக்ஸி ஒன்றை கடத்திய நபர்

மெல்பேர்ணில் CBD பகுதியில் வாடகை காரை கடத்தியதாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு ஃபிளிண்டர்ஸ் லேன் சந்திப்பிற்கு அருகில் நடந்தது. ஒரு...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Microsoft Australia

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம், Microsoft Australia மீது நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. Copilot  உள்ளிட்ட விலையுயர்ந்த 365 சந்தா...