News2022 The booker விருது வென்ற இலங்கையர்!

2022 The booker விருது வென்ற இலங்கையர்!

-

இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசை புனைகதைக்கான பிரிவில் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக வென்றுள்ளார்.

எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவம் மிக்க விருதாக ‘சர்வதேச புக்கர் பரிசு’ கருதப்படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்த புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரது “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்) என்ற புனைகதைக்காக ஷெஹான் கருணாதிலக புக்கர் பரிசை வென்றுள்ளார்.

இந்த நாவல், விடுதலை புலிகள் – இலங்கை ராணுவம் இடையே நடந்த போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைகதையாக எழுதப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பிரபல கச்சேரி அரங்கான ரவுண்ட்ஹவுஸில் புக்கர் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசர் 3-ம் சார்லசின் மனைவியும் ராணியுமான காமிலா கலந்துகொண்டார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...