Newsஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் வெள்ள நெருக்கடி நிலை!

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் வெள்ள நெருக்கடி நிலை!

-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் வெள்ளப்பெருக்கை எதிர்நோக்குகின்றனர்.

அடுத்த ஒருசில தினங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வீடுகள், பண்ணைகள், சிறுநகரங்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மிக நீளமான மர்ரே நதியின் நீர்மட்டம் 30 ஆண்டுகளில் இல்லாத உயரத்தை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மக்கள்தொகை அதிகம் கொண்ட நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாநிலங்களில் அந்த நதி ஓடுகிறது.

மெல்பர்ன் நகரில் இருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொவாமா நகரில் மீட்புப் பணி நடைபெறுகிறது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தங்கும் வசதி செய்து தரப்படுகிறது.

வெள்ளத்தின் காரணமாகப் பால் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

Latest news

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...

விக்டோரியாவில் புதிய பொதுப் போக்குவரத்து விதிகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், விக்டோரியாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். மாநிலம் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட...