Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம் கொசுக்கள் வளர அனுமதிப்பதாகவும், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயத்தை அதிகப்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.

அடைமழை மற்றும் வெள்ளத்தால் கொசுத்தொல்லை அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 31 பேர் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டதுடன் அவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்றி போன்ற விலங்குகளை கையாள்பவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...