Newsஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதி மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மர்ரே ஆற்றின் (The Murray) அருகே வசித்துவரும் குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.

விக்டோரியா (Victoria), நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), தெற்கு ஆஸ்திரேலியா (South Australia)ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக மர்ரே ஆறு செல்கிறது.

இன்று பின்னேரத்தில் அந்த ஆறு கரை புரளும் என்று நெருக்கடிக்காலச் சேவைப் பிரிவு எச்சரித்துள்ளது.

அப்போது கடல் மட்டத்திலிருந்து 95 மீட்டர் உயரத்திற்கு ஆற்று நீரின் அளவு பெருகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள விக்டோரியா மாநிலத்தின் எச்சுக்கா (EH-CHOO-KA) நகர குடியிருப்பாளர்கள் ஆயத்தமாகிவருகின்றனர்.

ஆற்று நீர், நகரின் வீதிகளுக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), வெள்ள நிவாரணப் பணிகளில் கைகொடுக்க, சுமார் 500 தற்காப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

மெல்பேர்ணில் ஒரு காவல் நிலையம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது

ஜனவரி 3 ஆம் திகதி, மெல்பேர்ணில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கிச் சூடு...