Newsஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதி மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மர்ரே ஆற்றின் (The Murray) அருகே வசித்துவரும் குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.

விக்டோரியா (Victoria), நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), தெற்கு ஆஸ்திரேலியா (South Australia)ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக மர்ரே ஆறு செல்கிறது.

இன்று பின்னேரத்தில் அந்த ஆறு கரை புரளும் என்று நெருக்கடிக்காலச் சேவைப் பிரிவு எச்சரித்துள்ளது.

அப்போது கடல் மட்டத்திலிருந்து 95 மீட்டர் உயரத்திற்கு ஆற்று நீரின் அளவு பெருகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள விக்டோரியா மாநிலத்தின் எச்சுக்கா (EH-CHOO-KA) நகர குடியிருப்பாளர்கள் ஆயத்தமாகிவருகின்றனர்.

ஆற்று நீர், நகரின் வீதிகளுக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), வெள்ள நிவாரணப் பணிகளில் கைகொடுக்க, சுமார் 500 தற்காப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...