Newsஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு மழை வெள்ள எச்சரிக்கை!

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதி மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளத் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மர்ரே ஆற்றின் (The Murray) அருகே வசித்துவரும் குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.

விக்டோரியா (Victoria), நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), தெற்கு ஆஸ்திரேலியா (South Australia)ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக மர்ரே ஆறு செல்கிறது.

இன்று பின்னேரத்தில் அந்த ஆறு கரை புரளும் என்று நெருக்கடிக்காலச் சேவைப் பிரிவு எச்சரித்துள்ளது.

அப்போது கடல் மட்டத்திலிருந்து 95 மீட்டர் உயரத்திற்கு ஆற்று நீரின் அளவு பெருகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத வகையில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ள விக்டோரியா மாநிலத்தின் எச்சுக்கா (EH-CHOO-KA) நகர குடியிருப்பாளர்கள் ஆயத்தமாகிவருகின்றனர்.

ஆற்று நீர், நகரின் வீதிகளுக்குள் புகுந்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), வெள்ள நிவாரணப் பணிகளில் கைகொடுக்க, சுமார் 500 தற்காப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...