Cinemaசர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

சர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

-

கார்த்தி நடிப்பில் இந்த வருடம் ஏற்கனவே வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த வருட தீபாவளி வெளியீடாக சர்தார் படம் வெளியாகி உள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்க்காந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராணுவ உளவாளியாக இருக்கும் அப்பா கார்த்திக் தேசத்துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார், இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து விடுகிறது. பின்பு பையன் கார்த்தியை அவர் சித்தப்பா முனிஸ்காந்த் வளர்த்து வருகிறார்.

பின்னாலில் கார்த்தியும் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாக துடிக்கும் கார்த்திக்கு அவரது புகழை இன்னும் வளர செய்யும் விதமாக ஒரு கேஸ் கிடைக்கிறது, இறுதியில் அந்த கேஸ் அவரது அப்பா சர்தார் இடம் கொண்டு செல்கிறது. உண்மையிலேயே சர்தார் கார்த்திக் செய்த தவறுகள் என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்பதே சர்தார் படத்தின் கதை.

சர்தார் படத்தின் ஹீரோ கார்த்தி என்பதைவிட மித்ரன் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியுள்ளார். அவரது திரைக்கதையே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். மித்ரன் சொல்ல நினைத்ததை அப்பா மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடித்த அசத்தியுள்ளார்.

அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. அப்பா மகன் என இரு வேடங்களிலும் அசத்தியுள்ளார் கார்த்தி. அவரைத் தாண்டி இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளது, யாருமே கதையில் தேவையில்லாமல் வந்து செல்லவில்லை.

முக்கியமான சமூக பொறுப்புள்ள ஒரு கதையில் ராஏஜென்ட், பாகிஸ்தான், சீனா என அனைத்தையும் உள்ளடக்கியதில் இயக்குனர் மித்ரன் வெற்றி பெறுகிறார். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சர்தார் படத்தில் உள்ளது.

காட்சிக்கு காட்சி ரசிகர்களை மிரள வைக்கிறது இந்த சர்தார் படம். ஒரு ரா ஏஜென்ட் என்னவெல்லாம் செய்து விட முடியுமோ அதனை நம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களையும் காட்சிகளால் நமக்கு புரிய வைக்கிறார் இயக்குனர்.

கார்த்தியின் திரை பயணத்தில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அப்பா கார்த்திக்கு போடப்பட்ட மேக்கப் மட்டும் ஒரு உறுத்தலாகவே இருந்தது தவிர படத்தில் வேறு எந்த குறைகளும் இல்லை. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தீபாவளி அன்று குடும்பத்துடன் என்ஜாய் பண்ணும் விதமாக சர்தார் படம் அமைந்துள்ளது. சர்தார் சபாஷ்.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...