Cinemaசர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

சர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

-

கார்த்தி நடிப்பில் இந்த வருடம் ஏற்கனவே வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த வருட தீபாவளி வெளியீடாக சர்தார் படம் வெளியாகி உள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்க்காந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராணுவ உளவாளியாக இருக்கும் அப்பா கார்த்திக் தேசத்துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார், இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து விடுகிறது. பின்பு பையன் கார்த்தியை அவர் சித்தப்பா முனிஸ்காந்த் வளர்த்து வருகிறார்.

பின்னாலில் கார்த்தியும் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாக துடிக்கும் கார்த்திக்கு அவரது புகழை இன்னும் வளர செய்யும் விதமாக ஒரு கேஸ் கிடைக்கிறது, இறுதியில் அந்த கேஸ் அவரது அப்பா சர்தார் இடம் கொண்டு செல்கிறது. உண்மையிலேயே சர்தார் கார்த்திக் செய்த தவறுகள் என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்பதே சர்தார் படத்தின் கதை.

சர்தார் படத்தின் ஹீரோ கார்த்தி என்பதைவிட மித்ரன் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியுள்ளார். அவரது திரைக்கதையே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். மித்ரன் சொல்ல நினைத்ததை அப்பா மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடித்த அசத்தியுள்ளார்.

அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. அப்பா மகன் என இரு வேடங்களிலும் அசத்தியுள்ளார் கார்த்தி. அவரைத் தாண்டி இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளது, யாருமே கதையில் தேவையில்லாமல் வந்து செல்லவில்லை.

முக்கியமான சமூக பொறுப்புள்ள ஒரு கதையில் ராஏஜென்ட், பாகிஸ்தான், சீனா என அனைத்தையும் உள்ளடக்கியதில் இயக்குனர் மித்ரன் வெற்றி பெறுகிறார். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சர்தார் படத்தில் உள்ளது.

காட்சிக்கு காட்சி ரசிகர்களை மிரள வைக்கிறது இந்த சர்தார் படம். ஒரு ரா ஏஜென்ட் என்னவெல்லாம் செய்து விட முடியுமோ அதனை நம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களையும் காட்சிகளால் நமக்கு புரிய வைக்கிறார் இயக்குனர்.

கார்த்தியின் திரை பயணத்தில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அப்பா கார்த்திக்கு போடப்பட்ட மேக்கப் மட்டும் ஒரு உறுத்தலாகவே இருந்தது தவிர படத்தில் வேறு எந்த குறைகளும் இல்லை. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தீபாவளி அன்று குடும்பத்துடன் என்ஜாய் பண்ணும் விதமாக சர்தார் படம் அமைந்துள்ளது. சர்தார் சபாஷ்.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...