Cinemaசர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

சர்தார் படம் எப்படி இருக்கு? குவியும் பாராட்டு

-

கார்த்தி நடிப்பில் இந்த வருடம் ஏற்கனவே வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த வருட தீபாவளி வெளியீடாக சர்தார் படம் வெளியாகி உள்ளது.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார், அவருடன் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, முனீஸ்க்காந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராணுவ உளவாளியாக இருக்கும் அப்பா கார்த்திக் தேசத்துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார், இதனால் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து விடுகிறது. பின்பு பையன் கார்த்தியை அவர் சித்தப்பா முனிஸ்காந்த் வளர்த்து வருகிறார்.

பின்னாலில் கார்த்தியும் போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாக துடிக்கும் கார்த்திக்கு அவரது புகழை இன்னும் வளர செய்யும் விதமாக ஒரு கேஸ் கிடைக்கிறது, இறுதியில் அந்த கேஸ் அவரது அப்பா சர்தார் இடம் கொண்டு செல்கிறது. உண்மையிலேயே சர்தார் கார்த்திக் செய்த தவறுகள் என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்பதே சர்தார் படத்தின் கதை.

சர்தார் படத்தின் ஹீரோ கார்த்தி என்பதைவிட மித்ரன் என்று சொல்லலாம், அந்த அளவிற்கு கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியுள்ளார். அவரது திரைக்கதையே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி ஆகும். மித்ரன் சொல்ல நினைத்ததை அப்பா மகன் என இரு வேடங்களில் கார்த்தி நடித்த அசத்தியுள்ளார்.

அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது. அப்பா மகன் என இரு வேடங்களிலும் அசத்தியுள்ளார் கார்த்தி. அவரைத் தாண்டி இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளது, யாருமே கதையில் தேவையில்லாமல் வந்து செல்லவில்லை.

முக்கியமான சமூக பொறுப்புள்ள ஒரு கதையில் ராஏஜென்ட், பாகிஸ்தான், சீனா என அனைத்தையும் உள்ளடக்கியதில் இயக்குனர் மித்ரன் வெற்றி பெறுகிறார். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சர்தார் படத்தில் உள்ளது.

காட்சிக்கு காட்சி ரசிகர்களை மிரள வைக்கிறது இந்த சர்தார் படம். ஒரு ரா ஏஜென்ட் என்னவெல்லாம் செய்து விட முடியுமோ அதனை நம் கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களையும் காட்சிகளால் நமக்கு புரிய வைக்கிறார் இயக்குனர்.

கார்த்தியின் திரை பயணத்தில் இந்த படம் முக்கியமானதாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அப்பா கார்த்திக்கு போடப்பட்ட மேக்கப் மட்டும் ஒரு உறுத்தலாகவே இருந்தது தவிர படத்தில் வேறு எந்த குறைகளும் இல்லை. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தீபாவளி அன்று குடும்பத்துடன் என்ஜாய் பண்ணும் விதமாக சர்தார் படம் அமைந்துள்ளது. சர்தார் சபாஷ்.

Latest news

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட புதிய வரிகள் அறிமுகம்

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

தொடரும் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தேடும் பணி

பெர்த்தில் புயல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முந்தினம் மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் குழுவினால்...