News2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு...

2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு கொரோனா தொற்று

-

கொரோனா காலப்பகுதிக்கு பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் பயணிகள் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் கப்பலை விட்டு வெளியேறாமல் 5 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோரல் பிரின்சஸ் கப்பலில் இருந்து மற்ற பயணிகள் அனைவரும் விரைவான சோதனைகளுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏறக்குறைய 2000 பயணிகளுடன் இந்த கப்பல் தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கொரோனா விதிமுறைகளின்படி, கப்பலில் உள்ள பயணிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அனைத்து பயணிகளும் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயணிகள் கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஆண்டுக்கு 05 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றன மற்றும் கொரோனா காலத்தில் முடங்கியுள்ளன.

பின்னர் ஒவ்வொரு மாநிலமும் கப்பல்களை அனுமதிக்கத் தொடங்கின, கடைசி மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியாவாகும். இதற்கிடையில், கொரோனா கொலப்பகுதிக்கு பிறகு முதல் முறையாக, பயணிகள் கப்பல் இன்று காலை டாஸ்மேனியாவில் உள்ள ஹோபார்ட் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஏறக்குறைய 3000 பயணிகள் அங்கு வந்தடைந்தனர், அடுத்த 06 மாதங்களில் கிட்டத்தட்ட 150,000 பயணிகள் ஹோபார்ட்டுக்கு வர முன்பதிவு செய்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...

பிலிப்பைன்ஸில் எரிமலை வெடிப்பு – 3000 குடும்பங்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸின் Albay மாகாணத்தில் அமைந்துள்ள மாயோன் எரிமலை வெடிப்பு தொடர்பில் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 05 கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நிலை, தற்போது மூன்றாம் நிலைக்கு...

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...