News2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு...

2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு கொரோனா தொற்று

-

கொரோனா காலப்பகுதிக்கு பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் பயணிகள் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் கப்பலை விட்டு வெளியேறாமல் 5 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோரல் பிரின்சஸ் கப்பலில் இருந்து மற்ற பயணிகள் அனைவரும் விரைவான சோதனைகளுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏறக்குறைய 2000 பயணிகளுடன் இந்த கப்பல் தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கொரோனா விதிமுறைகளின்படி, கப்பலில் உள்ள பயணிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அனைத்து பயணிகளும் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயணிகள் கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஆண்டுக்கு 05 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றன மற்றும் கொரோனா காலத்தில் முடங்கியுள்ளன.

பின்னர் ஒவ்வொரு மாநிலமும் கப்பல்களை அனுமதிக்கத் தொடங்கின, கடைசி மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியாவாகும். இதற்கிடையில், கொரோனா கொலப்பகுதிக்கு பிறகு முதல் முறையாக, பயணிகள் கப்பல் இன்று காலை டாஸ்மேனியாவில் உள்ள ஹோபார்ட் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஏறக்குறைய 3000 பயணிகள் அங்கு வந்தடைந்தனர், அடுத்த 06 மாதங்களில் கிட்டத்தட்ட 150,000 பயணிகள் ஹோபார்ட்டுக்கு வர முன்பதிவு செய்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...