News2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு...

2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு கொரோனா தொற்று

-

கொரோனா காலப்பகுதிக்கு பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் பயணிகள் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் கப்பலை விட்டு வெளியேறாமல் 5 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோரல் பிரின்சஸ் கப்பலில் இருந்து மற்ற பயணிகள் அனைவரும் விரைவான சோதனைகளுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏறக்குறைய 2000 பயணிகளுடன் இந்த கப்பல் தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கொரோனா விதிமுறைகளின்படி, கப்பலில் உள்ள பயணிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அனைத்து பயணிகளும் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயணிகள் கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஆண்டுக்கு 05 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றன மற்றும் கொரோனா காலத்தில் முடங்கியுள்ளன.

பின்னர் ஒவ்வொரு மாநிலமும் கப்பல்களை அனுமதிக்கத் தொடங்கின, கடைசி மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியாவாகும். இதற்கிடையில், கொரோனா கொலப்பகுதிக்கு பிறகு முதல் முறையாக, பயணிகள் கப்பல் இன்று காலை டாஸ்மேனியாவில் உள்ள ஹோபார்ட் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஏறக்குறைய 3000 பயணிகள் அங்கு வந்தடைந்தனர், அடுத்த 06 மாதங்களில் கிட்டத்தட்ட 150,000 பயணிகள் ஹோபார்ட்டுக்கு வர முன்பதிவு செய்துள்ளனர்.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...