News2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு...

2 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியா வந்த கப்பலில் இருந்த ஒரு குழுவினருக்கு கொரோனா தொற்று

-

கொரோனா காலப்பகுதிக்கு பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் பயணிகள் கப்பலில் இருந்த பல பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் கப்பலை விட்டு வெளியேறாமல் 5 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோரல் பிரின்சஸ் கப்பலில் இருந்து மற்ற பயணிகள் அனைவரும் விரைவான சோதனைகளுக்குப் பிறகு வெளியேற அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏறக்குறைய 2000 பயணிகளுடன் இந்த கப்பல் தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள புரூம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவின் கொரோனா விதிமுறைகளின்படி, கப்பலில் உள்ள பயணிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், அனைத்து பயணிகளும் விரைவான சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பயணிகள் கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு ஆண்டுக்கு 05 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டுகின்றன மற்றும் கொரோனா காலத்தில் முடங்கியுள்ளன.

பின்னர் ஒவ்வொரு மாநிலமும் கப்பல்களை அனுமதிக்கத் தொடங்கின, கடைசி மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியாவாகும். இதற்கிடையில், கொரோனா கொலப்பகுதிக்கு பிறகு முதல் முறையாக, பயணிகள் கப்பல் இன்று காலை டாஸ்மேனியாவில் உள்ள ஹோபார்ட் துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஏறக்குறைய 3000 பயணிகள் அங்கு வந்தடைந்தனர், அடுத்த 06 மாதங்களில் கிட்டத்தட்ட 150,000 பயணிகள் ஹோபார்ட்டுக்கு வர முன்பதிவு செய்துள்ளனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...