Newsஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

ஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

-

மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை குறைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலகம் முழுவதும் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இருந்து ஆஸ்திரேலியாவும் தப்ப முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்தால் அதை வழங்க மத்திய அரசு தயங்காது என நிதித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலியாவில் அடுத்த 02 வருடங்களில் மின் கட்டண விகிதங்கள் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், இந்த ஆண்டு இறுதிக்குள் மின் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றார்.

2023-24ல் இது 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் நெருக்கடி காரணமாக எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரிக்கலாம் என அவர் கணித்துள்ளார்.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...