Newsஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

ஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

-

மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை குறைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலகம் முழுவதும் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இருந்து ஆஸ்திரேலியாவும் தப்ப முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்தால் அதை வழங்க மத்திய அரசு தயங்காது என நிதித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலியாவில் அடுத்த 02 வருடங்களில் மின் கட்டண விகிதங்கள் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், இந்த ஆண்டு இறுதிக்குள் மின் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றார்.

2023-24ல் இது 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் நெருக்கடி காரணமாக எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரிக்கலாம் என அவர் கணித்துள்ளார்.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...