Newsஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

ஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

-

மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை குறைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலகம் முழுவதும் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இருந்து ஆஸ்திரேலியாவும் தப்ப முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்தால் அதை வழங்க மத்திய அரசு தயங்காது என நிதித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலியாவில் அடுத்த 02 வருடங்களில் மின் கட்டண விகிதங்கள் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், இந்த ஆண்டு இறுதிக்குள் மின் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றார்.

2023-24ல் இது 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் நெருக்கடி காரணமாக எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரிக்கலாம் என அவர் கணித்துள்ளார்.

Latest news

மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரள்வு – 13 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஓக்ஸாகா...

சீனாவில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை கண்காணிக்கும் AI

சீனாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ByteDance உருவாக்கிய AI சாட்பாட் "டோலா", குழந்தைகளின் நடத்தையைக்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

சிட்னி புத்தாண்டு வாணவேடிக்கைக்கு பலத்த பாதுகாப்பு

சிட்னியின் அடையாள புத்தாண்டு கொண்டாட்டம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. 2026 புத்தாண்டு கொண்டாட்டம், கண்கவர் வாணவேடிக்கையுடன் நடைபெறும் என்றும், Bondi பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து...