Newsஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

ஆஸ்திரேலிய மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

-

மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை குறைக்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலகம் முழுவதும் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இருந்து ஆஸ்திரேலியாவும் தப்ப முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்தால் அதை வழங்க மத்திய அரசு தயங்காது என நிதித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலியாவில் அடுத்த 02 வருடங்களில் மின் கட்டண விகிதங்கள் 50 சதவீதம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், இந்த ஆண்டு இறுதிக்குள் மின் கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றார்.

2023-24ல் இது 50 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் நெருக்கடி காரணமாக எரிவாயு விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரிக்கலாம் என அவர் கணித்துள்ளார்.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...