Newsஆஸ்திரேலியாவில் கோலியின் அறையின வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகர்! கோபத்தில் அனுஷ்கா

ஆஸ்திரேலியாவில் கோலியின் அறையின வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகர்! கோபத்தில் அனுஷ்கா

-

தனது அறையை வீடியோ எடுத்தது குறித்து வருத்தத்துடன் ரசிகர்களை விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கண்டித்திருக்கின்றனர்.

விராட் கோலியின் ரசிகர் ஒருவர், கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையினுள் நுழைந்து ‘இதுதான் கோலி தங்கியிருக்கும் அறை’ என்று அறையை சுற்றிக் காட்டும் விதமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விராட்கோலியின்
ரசிகர்கள் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

பலர் இதை ஆர்வதுடன் பகிர்ந்து வந்தாலும் சிலர் ‘இது விராட்கோலியின் தனிப்பட்ட விடயங்களில் குறுக்கிடுவதாக இருக்கிறது. அவரது ‘Privacy’-க்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று கூறிவருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில் வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கண்ட விராட்கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இந்த வீடியோவைத் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் இந்தச் செயலைக் கண்டித்து வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள விராட்கோலி, “ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களை நேரில் காண ஆசைப்படுவதைப் பாராட்டுகிறேன். ஆனால், இந்த வீடியோப் பதிவு என்னை அதிர்ச்சியடையச் செய்கிறது. இது எனது தனிப்பட்ட விடயங்களில் (privacy) குறுக்கிடுவதாகக் கருதுகிறேன்.

இது சரியானதும் அல்ல. எனது தனிப்பட்ட அறையில் கூட எனக்குப் பிரைவசி இல்லையென்றால் பிறகு வேறெந்த இடங்களில் நான் எனது தனிபட்ட நேரங்களைச் செலவிடுவது. இதுபோன்ற தீவிர ரசிக செயல்களில் எனக்கு சற்றும் உடன்பாடியில்லை. இது அத்துமீறல். தயவு செய்து அனைவரது தனிப்பட்ட விசயங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். யாரையும் பொழுதுபோக்குப் பொருளாக நடத்த வேண்டாம்”என்று தனது வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது பற்றிக் கூறியுள்ள அனுஷ்கா சர்மா, “இது மிகவும் தவறான செயல். அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். தங்களது தனிப்பட்ட விடயங்கள் பற்றிய செய்திகள் அல்லது புகைப்படங்கள் பொதுவெளியில் பகிரப்படுவதில் விருப்பம் இல்லை என்று கூறிவரும் இருவரும் தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிரவேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்தும் தங்களது தனிப்பட்ட விஷயங்களில் யாரும் குறுக்கிட வேண்டாம் என கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...