Newsகுயின்ஸ்லாந்தில் சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராகிய இலங்கையர்!

குயின்ஸ்லாந்தில் சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராகிய இலங்கையர்!

-

குயின்ஸ்லாந்தில் உள்ள சிறந்த பீட்சா உணவகத்தின் உரிமையாளராக இலங்கையர் ஒருவர் மாறியுள்ளார்.

அமில வெத்தசிங்க என்ற இலங்கையரே இவ்வாறு பீட்சா உணவகத்தின் உரிமையாளராகியுள்ளார்.

2002 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடையில், அவர் 71 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 A-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அமில வெத்தசிங்க இங்கிலாந்தின் லிங்கன்ஷயர் மற்றும் கும்ப்ரியாவில் நடந்த லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் 113 இன்னிங்ஸ்களில் அமிலா பெற்ற ரன்களின் எண்ணிக்கை 2583 மற்றும் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 136 ரன்கயை பெற்றுள்ளார்.

03 சதங்களும் 11 அரைசதங்களும் அவற்றில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்தரப் போட்டிகளில் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அமில வெத்தசிங்க சகலதுறை வீரராகும்.

ஆஸ்திரேலியா வந்த பிறகும் கிரிக்கெட்டில் ஈடுபட்டு, குயின்ஸ்லாந்தில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

அமிலாவின் மகன் தற்போது 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். கிரிக்கெட் தவிர, பீட்சா உணவகத்தை தொழிலாக நடத்தி வருகிறார் அமில.

இந்த நிலையில் OzSrio Pizza Kebab & Cafe-Ipswich எனப்படும் பீட்சா உணவகம் குயின்ஸ்லாந்தில் உள்ள சிறந்த பீட்சா உணவகமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...