Cinemaசூப்பர் ஹிட்டான சர்தார் - இயக்குனருக்கு சூப்பர் பரிசு!

சூப்பர் ஹிட்டான சர்தார் – இயக்குனருக்கு சூப்பர் பரிசு!

-

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’சர்தார்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியானது என்பதும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் நல்ல வசூலை செய்து வருகிறது என்றும் இந்தப் படம் ’விருமன்’, ’பொன்னியின் செல்வன்’ படங்களை அடுத்து கார்த்தியின் வெற்றி பட பட்டியலில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு டொயோட்டா லான்சன் காரை பரிசாக அளித்துள்ளது. இந்த காரின் சாவியை நடிகர் கார்த்தி இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு வழங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பிஎஸ் மித்ரனுக்கு இந்த பரிசு ஒரு சூப்பர் பரிசு என்பது குறிபிடத்தக்கது.

இந்தநிலையில் ’சர்தார்’ படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாக தயாரிப்பு குறித்த திட்டம் இருப்பதாகவும் விரைவில் ’சர்தார் 2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’சர்தார்’ படத்தையடுத்து கார்த்தி தற்போது இயக்குனர் ராஜூமுருகன் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் ’கைதி 2’ படத்தில் நடிக்கவிருக்கும் நிலையில் அதன்பிறகு ’சர்தார் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...