Breaking Newsவெளிநாடு செல்ல முயற்சித்த 300 இலங்கை இளைஞர் யுவுதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாடு செல்ல முயற்சித்த 300 இலங்கை இளைஞர் யுவுதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

-

வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் பத்தரமுல்ல ரஜமல்வத்த என்ற இடத்தில் நடத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து அஜித்குமார விக்ரமசிங்க என்ற நபர் ,நாடு முழுவதிலும் சுமார் 180 இளைஞர் யுவதிகளிடம் தலா 1 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா வீதமும், ஏனையவர்களிடம் 6 ஆயிரம் ரூபாவும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பணம் செலுத்தப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் வேலைவாய்ப்பு கிட்டவில்லை. இதனால் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு சென்று இவர்கள் கேட்டுள்ளனர். இதன் உரிமையாளர் பல்வேறு கூற்றுக்களை தெரிவித்து தம்மை ஏமாற்ற முயற்சித்ததாக அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலங்கம பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலங்கம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...