Breaking Newsவெளிநாடு செல்ல முயற்சித்த 300 இலங்கை இளைஞர் யுவுதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாடு செல்ல முயற்சித்த 300 இலங்கை இளைஞர் யுவுதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

-

வெளிநாட்டில் வேலைவாய்பை பெற்று தருவதாக கூறி சுமார் 300 இளைஞர் யுவதிகளிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர், தலங்கம பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடியில் சிக்கிய சிலர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போலி வெளிநாட்டு முகவர் நிலையம் பத்தரமுல்ல ரஜமல்வத்த என்ற இடத்தில் நடத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக தெரிவித்து அஜித்குமார விக்ரமசிங்க என்ற நபர் ,நாடு முழுவதிலும் சுமார் 180 இளைஞர் யுவதிகளிடம் தலா 1 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா வீதமும், ஏனையவர்களிடம் 6 ஆயிரம் ரூபாவும் பணம் பெற்றுக் கொண்டுள்ளார்.

பணம் செலுத்தப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் வேலைவாய்ப்பு கிட்டவில்லை. இதனால் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு சென்று இவர்கள் கேட்டுள்ளனர். இதன் உரிமையாளர் பல்வேறு கூற்றுக்களை தெரிவித்து தம்மை ஏமாற்ற முயற்சித்ததாக அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தலங்கம பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலங்கம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி 17 வயது சிறுமி மரணம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தின் நீரில் சுறா தாக்கி ஒரு பெண் நீச்சல் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே...

பாக்டீரியா அச்சுறுத்தல் காரணமாக குடிநீரை கொதிக்க வைத்து பருகுமாறு அறிவுறுத்தல்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடற்கரையில் வசிப்பவர்கள் கொதிக்க வைத்த தண்ணீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் குழாய் நீரில் E.coli என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து...

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு மேலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மக்களுக்கு புயல்கள் மற்றும் கனமழைக்கான ஆபத்து தொடர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருவமழை அழுத்தம் தீவிரமாக இருப்பதால், இந்த வாரம் முழுவதும்...