Newsசிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க - இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

சிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க – இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

-

ஆஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இன்று அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணொருவரையே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பாலியல் குற்றப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தனுஷ்க குணதிலக்க மீதுான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயினும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஜப்பான் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறிய பெண் கடும் குளிரால் மரணம்

ஆஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக உயரமான Grossglockner சிகரத்தின் மீது ஏறிய salzburg 33 வயது பெண்...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...