Newsசிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க - இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

சிட்னியில் கைதான தனுஷ்க குணதிலக்க – இளம் பெண்ணுக்கு நடந்தது என்ன?

-

ஆஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இன்று அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணொருவரையே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பாலியல் குற்றப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தனுஷ்க குணதிலக்க மீதுான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயினும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

ஒரு தாயின் மரணத்திற்கு உதவிய Chatgpt மீது வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் Microsoft இரண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது தாயைக் கொல்ல ChatGPT ஊக்குவித்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 56...

Tomago Aluminium நிறுவனத்தில் 1000 வேலைகள் உறுதி

ஆஸ்திரேலியாவின் முக்கிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான Tomago அலுமினிய உருக்காலையைத் தொடர்ந்து திறந்த நிலையில் வைத்திருக்க ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இது...

வித்தியாசமாக மசாஜ் செய்த ஆஸ்திரேலிய மசாஜ் சிகிச்சையாளர் பணிநீக்கம்

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம், பன்பரி மசாஜ் சிகிச்சையாளர் அந்தோணி பிரைனை தனது 13 பெண் வாடிக்கையாளர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி...

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனை படுக்கைகளுக்கு பற்றாக்குறை

புதிய தேசிய புள்ளிவிவரங்கள் 3,000 க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிப்பு நோயாளிகள் பொது மருத்துவமனைகளில் சிக்கித் தவிப்பதை வெளிப்படுத்தியுள்ளன. இது மூன்று மாதங்களில் 25 சதவீத...

விமானத்தின் வாலில் பாராசூட் உடன் சிக்கிய Skydiver

வான் சாகத்தில் ஈடுபடும் போது ஸ்கைடைவரின் பாராசூட் விமானத்தின் வாலில் சிக்கிக் கொண்ட மோசமான சம்பவம் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் Cairns தெற்கே சுமார் 15,000...