Newsஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் தனுஷ்க குணதிலக்க

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் தனுஷ்க குணதிலக்க

-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணை முடியும்வரை அவரால் நாடு திரும்ப முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலிய சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளையும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதன்போது அவருக்கு பிணை வழங்கப்படும் என சட்டத்தரணிகள் சிலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வாறு பிணை வழங்கப்பட்டாலும் வழக்கு தீர்ப்பு வரும்வரை அவரால் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற முடியாது.

அதேவேளை, தனுஷ்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தேசிய அணியில் தடை விதிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது.

Latest news

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

போராட்டங்களின் போது காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறினால் $5,500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog சிட்னிக்கு வருகை தருவதற்கு முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியதை சட்டப்பூர்வமாக சவால் செய்யத்...

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தலுக்கு முன்னதாக லிபரல்-தொழிலாளர் கட்சிகளிடமிருந்து சிறப்பு வாக்குறுதிகள்

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் மார்ச் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும் லிபரல் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு முன்னதாக மக்களை ஈர்க்க...

மெல்பேர்ணில் தீப்பிடித்த தேவாலயம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு தேவாலயம் இரவில் தீப்பிடித்ததை அடுத்து, ஒருவர் போலீஸ் காவலில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பிறகு, மெல்பேர்ண் CBD க்கு...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...