Newsயாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் மகத்தான செயல் - குவியும்...

யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களின் மகத்தான செயல் – குவியும் பாராட்டு

-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

முன்னர் காணப்பட்ட பிரிவு, தற்போது பராமரிப்புடன் கூடிய நவீன வசதிகளுடன் புதுபிக்கப்பட்ட நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் 83 ஆம் அணியின்,ஆதரவில் குறித்த பிரிவு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

கட்டடத்தை பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி மாஸ்டர் திறந்து வைத்தார். நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. Gnanaponraj உட்பட மருத்துவர்கள்,தாதியர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் யாழ் பரியோவான் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஈகிள் கெயர் ரிறஸ்ட் அமைப்பானது, இலங்கையில் உள்ள மக்கள் மற்றும் வைத்தியசாலைகளின் தேவைகளை அறிந்து உதவி வருகின்றது.

யாழ் பரியோவான் கல்லூரி 1983ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர இருதய சத்திர சிகிச்சைப் பிரிவானது, புதுப்பிக்கப்பட்டமையில் பகுதியளவில் தமது உதவியை இவ் அமைப்பு ஊடாக வழங்கியுள்ளனர். அத்துடன் இவ் அலகைப் பராமரிப்பதற்கும் தமது ஒப்புதலை வழங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...