Newsஆஸ்திரேலிய பிரதமருக்கு அதிர்ச்சி - இணைய ஊடுருவல் கும்பல் விடுத்த மிரட்டல்

ஆஸ்திரேலிய பிரதமருக்கு அதிர்ச்சி – இணைய ஊடுருவல் கும்பல் விடுத்த மிரட்டல்

-

ஆஸ்திரேலியாவின் Medibank நிறுவனத்திடம் இணையத் தகவல் ஊடுருவல் கும்பல் 10 மில்லியன் டொலர் பிணைத்தொகை கேட்டுள்ளது.

Medibank நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் வாடிக்கையாளர்கள் சுமார் 9.7 மில்லியன் பேரின் தகவல்களை ஊடுருவல் கும்பல் திருடிவிட்டது. பிரதமர் ஆன்டனி அல்பனீசியின் (Anthony Albanese) தனிப்பட்ட தகவல்களும் அவற்றில் அடங்கும்.

முக்கியமான சிலருடைய பெயர்கள், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பிறந்த தேதி, கடப்பிதழ் எண் உள்ளிட்ட தகவல்களை மாதிரிக்காக நேற்று ஊடுருவல் கும்பல் இணையத்தில் கசியவிட்டது. பிணைத்தொகை தொடர்பான கோரிக்கையையும் கும்பல் அதில் குறிப்பிட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தனியார் காப்புறுதி நிறுவனமான Medibank பிணைத்தொகை கொடுக்க மறுத்துவிட்டது.

ஊடுருவல் கும்பலைச் சேர்ந்தவர்கள் “தரம்கெட்ட குற்றவாளிகள்” என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் (Clare O’Neil) கூறியுள்ளார்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...