Newsஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ள தடைகள் - பரிதாப நிலையில் தனுஷ்க

ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்துள்ள தடைகள் – பரிதாப நிலையில் தனுஷ்க

-

ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலிய நீதிமன்றினால் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பிணையில் செல்ல நீதிவான் Janet Wahlquist அனுமதி வழங்கினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர்,தனுஷ்கவுக்கான பிணை நிற்க முன்வந்திருந்தார்.

மேலும், தினசரி காவல்நிலையத்தில் முன்னிலையாக வேண்டும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது, முறைப்பாட்டாளருடன் எந்தவிதத்திலும் தொடர்பையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் பிணை நிபந்தனையில் நீதிவான் தெரிவித்துள்ளார்.

மேலும், டிண்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை அணுக்கக்கூடாது என்றும் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிக்க இன்று சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் நீதிவான் ஜெனட் வொல்கிஸ்ட் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அங்கு அவர் பார்க்லியா சிறையிலிருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த காவல்துறை தரப்பு சட்டத்தரணி கெர்ரி-ஆன் மெக்கின்னன், முறைப்பாட்டாளரின் பாதுகாப்பிற்கு தனுஷ்கவினால் அச்சுறுத்தல் நேரலாம் என்று வாதிட்டார்.

இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பிரஜையாக இருந்தால் அவருக்கு எவ்வாறு பிணை கிடைக்கும் என்பதை பரிசீலிப்பதாக நீதிவான் கூறினார்.

எவ்வாறாயினும், தனுஷ்க சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி முருகன் தங்கராஜ், அவர் பிணை நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பார் எனக்கூறி, அவரை விடுவிக்க கோரினார்.

கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறை விசாரணையில், தனுஷ்க பாதிக்கப்பட்டவரால் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார். எனினும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை.

குணதிலக்க தனது கடவுச்சீட்டை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், அவர் தப்பிக்கும் எண்ணத்தை வெளிகாட்டவில்லை என்றும் சட்டத்தரணி முருகன் தங்கராஜ் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும், பரிசீலித்த நீதிவான் பிணை அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, 31 வயதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, இலங்கை கிரிக்கெட் அணியுடன் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.

அதன்போது அவர் தங்கியிருந்த சிட்னியில் உள்ள ஹயாட் ரீஜென்சி விடுதியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அவர்மீது சம்மதம் இல்லாத உடலுறவு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...