Newsஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

ஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

-

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் 150,000 டொலர் பிணைத்தொகை விதிக்கப்பட்டது.

அந்த பிணைத்தொகையை, மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவரால் வைப்பு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிணையைப் பெறுவதற்குத் தேவையான முழுத் தொகையையும் நீதிமன்றத்தில் வைப்பிலிடுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவருக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான உறவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் குழுவொன்று தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.

அவர் தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் பெறுவதற்காக ஆஸ்திரேலிய முகவரி வழங்கப்பட்ட இலங்கை பணக்கார குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சிட்னியில் வசிக்கும் இலங்கையின் செல்வந்த குடும்பங்கள் பல அவரது செலவுகளை ஈடுகட்டவும், தங்குமிட வசதிகளை வழங்கவும் முன்வந்துள்ளதுடன், சிட்னி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றும் தனுஷ்கவின் செலவுகளுக்கு பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் வழக்கின் அடுத்த அழைப்பாணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...