Newsஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

ஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

-

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் 150,000 டொலர் பிணைத்தொகை விதிக்கப்பட்டது.

அந்த பிணைத்தொகையை, மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவரால் வைப்பு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிணையைப் பெறுவதற்குத் தேவையான முழுத் தொகையையும் நீதிமன்றத்தில் வைப்பிலிடுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவருக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான உறவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் குழுவொன்று தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.

அவர் தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் பெறுவதற்காக ஆஸ்திரேலிய முகவரி வழங்கப்பட்ட இலங்கை பணக்கார குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சிட்னியில் வசிக்கும் இலங்கையின் செல்வந்த குடும்பங்கள் பல அவரது செலவுகளை ஈடுகட்டவும், தங்குமிட வசதிகளை வழங்கவும் முன்வந்துள்ளதுடன், சிட்னி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றும் தனுஷ்கவின் செலவுகளுக்கு பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் வழக்கின் அடுத்த அழைப்பாணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...