Newsஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

ஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

-

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் 150,000 டொலர் பிணைத்தொகை விதிக்கப்பட்டது.

அந்த பிணைத்தொகையை, மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவரால் வைப்பு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிணையைப் பெறுவதற்குத் தேவையான முழுத் தொகையையும் நீதிமன்றத்தில் வைப்பிலிடுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவருக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான உறவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் குழுவொன்று தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.

அவர் தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் பெறுவதற்காக ஆஸ்திரேலிய முகவரி வழங்கப்பட்ட இலங்கை பணக்கார குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சிட்னியில் வசிக்கும் இலங்கையின் செல்வந்த குடும்பங்கள் பல அவரது செலவுகளை ஈடுகட்டவும், தங்குமிட வசதிகளை வழங்கவும் முன்வந்துள்ளதுடன், சிட்னி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றும் தனுஷ்கவின் செலவுகளுக்கு பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் வழக்கின் அடுத்த அழைப்பாணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Latest news

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன....

வத்திக்கானில் பாப்பரசருக்காக பிரார்த்திக்கும் மக்கள்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், வத்திக்கான் சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அவர் உடல் நலன் பெற வேண்டும்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

40வது பிறந்தநாளைக் கொண்டாடிய பேஸ்புக் நிறுவனரின் மனைவி

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லா சான் கடந்த 24ம் திகதி தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பெப்ரவரி 24, 1985 இல் பிறந்த இவர்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கோகோடாவைப் பார்வையிட அனுமதி

பப்புவா நியூ கினியாவில் உள்ள புகழ்பெற்ற கோகோடா பாதை பார்வையாளர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் 96 கிலோமீட்டர் நீளமுள்ள கோகோடா பாதையில் மலையேறுகிறார்கள். பப்புவா...

150 ஆண்டுக்கு பிறகு Queen Victoria Market நடந்த வேலைநிறுத்தம்

மெல்பேர்ண் குடியிருப்பாளர்களிடையே பிரபலமான சந்தையான குயின் விக்டோரியா சந்தையில், அதன் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார இழப்புகளை மறைக்க மெல்பேர்ண்...