Newsசிட்னி சிறையில் இருந்து விடுதலையான தனுஷ்க - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

சிட்னி சிறையில் இருந்து விடுதலையான தனுஷ்க – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

-

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களில் சில காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவை பிணையில் விடுவிக்க சிட்னி “டவுனிங் சென்டர்” நீதிமன்றம் கடந்த 17ம் திகதி உத்தரவிட்டது.

இதன்படி, 150,000 அவுஸ்திரேலிய டொலர் ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்ட தனுஷ்க குணதிலக்கவுக்கு மேலும் பல கடுமையான பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

மேலும் 50,000 ஆஸ்திரேலிய டொலர்களை டெபாசிட் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது, பிணை நிபந்தனைகளை மீறினால் அது பறிமுதல் செய்யப்படும்.

பிணை நிபந்தனைகளின் பிரகாரம், தனுஷ்க குணதில தினமும் ஈஸ்ட்வுட் பொலிஸில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிட்னிக்கு கிழக்கே “Rose Bay” என்ற இடத்தில் வசிக்கும் 29 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில், தனுஷ்க குணதிலகவ, நவம்பர் 6 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் அணி தங்கியிருந்த சிட்னி ஹோட்டலில் சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தனுஷ்க குணதிலக்கவின் விமான அனுமதிப்பத்திரமும் நீதிமன்றக் காவலில் உள்ளதால், வழக்கு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...