Newsஅபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

அபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

-

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கொரோனா பரவலின் போது விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

அவ்வாறு விதிக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான அபராதங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆதரவுக் குழுவொன்று தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சில அபராதங்கள் செல்லாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதையடுத்து அவற்றைத் திருப்பிக்கொடுக்க அல்லது ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் மொத்தம் 60,000 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

பொதுச் சுகாதார உத்தரவுகளை மீறியவர்களுக்கு 670 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர்கள் பலர் அது செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பினர்.

தண்டனை அறிவிப்பில் குற்றத்தைப் பற்றி போதுமான அளவு விவரிக்கவில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் சுமத்துவதற்கான விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மாநில உச்ச நீதிமன்றமும் அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

போராட்டங்களின் போது காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறினால் $5,500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog சிட்னிக்கு வருகை தருவதற்கு முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியதை சட்டப்பூர்வமாக சவால் செய்யத்...

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தலுக்கு முன்னதாக லிபரல்-தொழிலாளர் கட்சிகளிடமிருந்து சிறப்பு வாக்குறுதிகள்

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் மார்ச் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும் லிபரல் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு முன்னதாக மக்களை ஈர்க்க...

மெல்பேர்ணில் தீப்பிடித்த தேவாலயம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு தேவாலயம் இரவில் தீப்பிடித்ததை அடுத்து, ஒருவர் போலீஸ் காவலில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பிறகு, மெல்பேர்ண் CBD க்கு...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...