Newsஅபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

அபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

-

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கொரோனா பரவலின் போது விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

அவ்வாறு விதிக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான அபராதங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆதரவுக் குழுவொன்று தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சில அபராதங்கள் செல்லாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதையடுத்து அவற்றைத் திருப்பிக்கொடுக்க அல்லது ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் மொத்தம் 60,000 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

பொதுச் சுகாதார உத்தரவுகளை மீறியவர்களுக்கு 670 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர்கள் பலர் அது செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பினர்.

தண்டனை அறிவிப்பில் குற்றத்தைப் பற்றி போதுமான அளவு விவரிக்கவில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் சுமத்துவதற்கான விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மாநில உச்ச நீதிமன்றமும் அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு புதிய கிரகத்தை ஆஸ்திரேலிய வானியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் புல்டோசர் விபத்தில் உயிரிழந்துள்ளார். துறைமுக வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு புல்டோசர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...