Newsஅபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

அபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

-

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கொரோனா பரவலின் போது விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

அவ்வாறு விதிக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான அபராதங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆதரவுக் குழுவொன்று தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சில அபராதங்கள் செல்லாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதையடுத்து அவற்றைத் திருப்பிக்கொடுக்க அல்லது ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் மொத்தம் 60,000 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

பொதுச் சுகாதார உத்தரவுகளை மீறியவர்களுக்கு 670 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர்கள் பலர் அது செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பினர்.

தண்டனை அறிவிப்பில் குற்றத்தைப் பற்றி போதுமான அளவு விவரிக்கவில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் சுமத்துவதற்கான விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மாநில உச்ச நீதிமன்றமும் அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...