News16 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிஷ்டம்

16 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த அதிஷ்டம்

-

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ லேக்கீ தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதனை சமன் செய்வதற்காக டென்மார்க் அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து டென்மார்க் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது.

உலகக்கிண்ண தொடரில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சுற்றிலிருந்து ஆஸி. இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Latest news

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பின் உறுப்பினர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட சிறுவர் துஷ்பிரயோக கும்பலின் உறுப்பினர்களை நீதியின் முன் நிறுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில குற்றவியல் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, இதுவரை...

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...