Newsஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் - மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த...

ஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் – மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த கதி

-

ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு மனைவியைக் கொன்றதற்காக 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் டாசன் என்ற அந்த 74 வயதுடைய நபர் அவரது மனைவி லினெட் டாசனைச் (Chris Dawson) சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கிறிஸின் முன்னாள் மாணவரும் பிள்ளைப் பராமரிப்பாளருமான பதின்மவயதுப் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்த காலத்தில் கிறிஸ் அவரது மனைவியைக் கொன்றதாகக் கூறப்பட்டது.

அவரது சடலம் கண்டறியப்படவில்லை. 2018ஆம் ஆண்டில் The Teacher’s Pet எனும் வலையொலி வெளியானதையடுத்து, அந்தக் கொலையில் சில முக்கியத் தடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதன் மூலம் புதியதொரு காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டது. கிறிஸ் கள்ளத்தொடர்பு கொண்டிருந்த முன்னாள் மாணவர் மீது தீவிர மோகம் கொண்டிருந்ததால் அவரது மனைவியைக் கொலைசெய்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அவருக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வயதின் காரணமாக அவர் சிறையிலேயே இறக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...