Newsஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் - மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த...

ஆஸ்திரேலியாவில் மாணவி மீது கொண்ட மோகம் – மனைவியை கொன்றவருக்கு நேர்ந்த கதி

-

ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு மனைவியைக் கொன்றதற்காக 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் டாசன் என்ற அந்த 74 வயதுடைய நபர் அவரது மனைவி லினெட் டாசனைச் (Chris Dawson) சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கிறிஸின் முன்னாள் மாணவரும் பிள்ளைப் பராமரிப்பாளருமான பதின்மவயதுப் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்த காலத்தில் கிறிஸ் அவரது மனைவியைக் கொன்றதாகக் கூறப்பட்டது.

அவரது சடலம் கண்டறியப்படவில்லை. 2018ஆம் ஆண்டில் The Teacher’s Pet எனும் வலையொலி வெளியானதையடுத்து, அந்தக் கொலையில் சில முக்கியத் தடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதன் மூலம் புதியதொரு காவல்துறை விசாரணை தொடங்கப்பட்டது. கிறிஸ் கள்ளத்தொடர்பு கொண்டிருந்த முன்னாள் மாணவர் மீது தீவிர மோகம் கொண்டிருந்ததால் அவரது மனைவியைக் கொலைசெய்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அவருக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வயதின் காரணமாக அவர் சிறையிலேயே இறக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

விக்டோரியாவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 8 வயது சிறுவன்

விக்டோரியாவின் கீல்லாவில் உள்ள ஒரு Display house-இல் உள்ள குளத்தில் மூழ்கி எட்டு வயது சிறுவன் உயிரிழந்தான். Shepparton அருகே உள்ள GJ Gardiner வீட்டில் உள்ள...