Breaking News3 வருடங்களின் பின் பரபரப்பாகும் சிட்னி விமான நிலையம்!

3 வருடங்களின் பின் பரபரப்பாகும் சிட்னி விமான நிலையம்!

-

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் சுமார் 22 லட்சம் பயணிகள் சிட்னி விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12 முதல் ஜனவரி 6 வரையிலான காலகட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 03 வருடங்களின் பின்னர் இந்த வருடம் மிகவும் பரபரப்பான கிறிஸ்துமஸ் விடுமுறை காலமாக இருக்கும் என சிட்னி விமான நிலைய அதிகாரிகள் கணித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் சுமார் 19 இலட்சம் பயணிகள் உள்நாட்டு விமானங்களில் ஈடுபடுவார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் பரவத் தொடங்கிய 2019 டிசம்பரில் இருந்து இது 91 சதவீதம் அதிகமாகும்.

சர்வதேச விமானப் பயணிகளின் வளர்ச்சி 71 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு விமானத்திற்கு 02 மணி நேரத்திற்கு முன்னதாகவும், சர்வதேச விமானத்திற்கு 03 மணி நேரத்திற்கு முன்னதாகவும் விமான நிலையத்தை வந்தடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...