Newsஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து - பயணப்பொதியில் ஆறு கிலோ...

ஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து – பயணப்பொதியில் ஆறு கிலோ இறைச்சி!

-

தனது பயணப்பொதியில் ஆறு கிலோகிராம் இறைச்சியுடன் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட ஒரு நபரின் விசா ரத்து செய்யப்பட்டு அவருக்கு $2,664 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Foot and Mouth நோய்ப்பரவலைத் தடுப்பதற்கென கடுமையான சட்டங்களை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியுள்ள பின்னணியில், 6 கிலோ இறைச்சியுடன் வந்த பயணி ஒருவரது விசா ரத்துச் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பெர்த் விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரின் பயணப்பைகளை ஆஸ்திரேலிய biosecurity அதிகாரிகள் சோதனையிட்டபோது, 3.1 கிலோ வாத்து இறைச்சி, 1.4 கிலோ மாட்டிறைச்சி rendang, 500 கிராமுக்கு மேல் frozen மாட்டிறைச்சி மற்றும் கிட்டத்தட்ட 900 கிராம் கோழி இறைச்சி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நபர் தனது incoming passenger அட்டையில் இறைச்சி அல்லது பிற உணவு எதையும் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வரவில்லை என குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் அந்த நபரின் விசாவை ரத்து செய்ததாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார். மேலும் அவருக்கு $2,664 அபராதம் விதிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் விவசாயத் துறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய foot and mouth நோய்ப்பரவலைத் தடுக்கும்வகையில், ஆஸ்திரேலியாவிற்குள் இறைச்சி உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டுவருவதற்கான தடை அண்மையில் விதிக்கப்பட்டது.

குறித்த பயணியிடம் காணப்பட்ட இறைச்சி வகைகள், foot and mouth நோய் அபாயத்தையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலையும் கொண்டுவரும் அபாயத்தை உட்படுத்தியது என குறிப்பிடப்படுகிறது.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...