Newsஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து - பயணப்பொதியில் ஆறு கிலோ...

ஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து – பயணப்பொதியில் ஆறு கிலோ இறைச்சி!

-

தனது பயணப்பொதியில் ஆறு கிலோகிராம் இறைச்சியுடன் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட ஒரு நபரின் விசா ரத்து செய்யப்பட்டு அவருக்கு $2,664 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Foot and Mouth நோய்ப்பரவலைத் தடுப்பதற்கென கடுமையான சட்டங்களை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியுள்ள பின்னணியில், 6 கிலோ இறைச்சியுடன் வந்த பயணி ஒருவரது விசா ரத்துச் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பெர்த் விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரின் பயணப்பைகளை ஆஸ்திரேலிய biosecurity அதிகாரிகள் சோதனையிட்டபோது, 3.1 கிலோ வாத்து இறைச்சி, 1.4 கிலோ மாட்டிறைச்சி rendang, 500 கிராமுக்கு மேல் frozen மாட்டிறைச்சி மற்றும் கிட்டத்தட்ட 900 கிராம் கோழி இறைச்சி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நபர் தனது incoming passenger அட்டையில் இறைச்சி அல்லது பிற உணவு எதையும் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வரவில்லை என குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் அந்த நபரின் விசாவை ரத்து செய்ததாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார். மேலும் அவருக்கு $2,664 அபராதம் விதிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் விவசாயத் துறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய foot and mouth நோய்ப்பரவலைத் தடுக்கும்வகையில், ஆஸ்திரேலியாவிற்குள் இறைச்சி உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டுவருவதற்கான தடை அண்மையில் விதிக்கப்பட்டது.

குறித்த பயணியிடம் காணப்பட்ட இறைச்சி வகைகள், foot and mouth நோய் அபாயத்தையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலையும் கொண்டுவரும் அபாயத்தை உட்படுத்தியது என குறிப்பிடப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...