Newsஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து - பயணப்பொதியில் ஆறு கிலோ...

ஆஸ்திரேலியா வந்த நபரின் விசா ரத்து – பயணப்பொதியில் ஆறு கிலோ இறைச்சி!

-

தனது பயணப்பொதியில் ஆறு கிலோகிராம் இறைச்சியுடன் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட ஒரு நபரின் விசா ரத்து செய்யப்பட்டு அவருக்கு $2,664 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Foot and Mouth நோய்ப்பரவலைத் தடுப்பதற்கென கடுமையான சட்டங்களை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்தியுள்ள பின்னணியில், 6 கிலோ இறைச்சியுடன் வந்த பயணி ஒருவரது விசா ரத்துச் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பெர்த் விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரின் பயணப்பைகளை ஆஸ்திரேலிய biosecurity அதிகாரிகள் சோதனையிட்டபோது, 3.1 கிலோ வாத்து இறைச்சி, 1.4 கிலோ மாட்டிறைச்சி rendang, 500 கிராமுக்கு மேல் frozen மாட்டிறைச்சி மற்றும் கிட்டத்தட்ட 900 கிராம் கோழி இறைச்சி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நபர் தனது incoming passenger அட்டையில் இறைச்சி அல்லது பிற உணவு எதையும் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வரவில்லை என குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் அந்த நபரின் விசாவை ரத்து செய்ததாக உள்துறை அமைச்சர் Clare O’Neil தெரிவித்தார். மேலும் அவருக்கு $2,664 அபராதம் விதிக்கப்பட்டு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் விவசாயத் துறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய foot and mouth நோய்ப்பரவலைத் தடுக்கும்வகையில், ஆஸ்திரேலியாவிற்குள் இறைச்சி உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டுவருவதற்கான தடை அண்மையில் விதிக்கப்பட்டது.

குறித்த பயணியிடம் காணப்பட்ட இறைச்சி வகைகள், foot and mouth நோய் அபாயத்தையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலையும் கொண்டுவரும் அபாயத்தை உட்படுத்தியது என குறிப்பிடப்படுகிறது.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...