Breaking Newsஆண்டின் கடைசி தேசிய அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள்...

ஆண்டின் கடைசி தேசிய அமைச்சரவை கூட்டம் இன்று – முக்கிய முடிவுகள் எடுக்க தீர்மானம்!

-

இந்த ஆண்டின் கடைசி தேசிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

இதற்குக் காரணம், எரிசக்திக் கட்டணத்தைக் குறைப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளமையே.

அதற்கு ஒப்புதல் அளித்து, எரிசக்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், சில மாதங்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என்பது விமர்சகர்களின் கருத்து.

எனினும், எரிசக்தி நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காவிட்டால், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பிரதமர்கள் இந்த முன்மொழிவை நிராகரிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த நிறுவனங்களின் பெரும்பான்மையான பங்குகள் அந்தந்த மாநில அரசுகளுக்குச் சொந்தமானவை என்பதால், பல பில்லியன் டாலர்களை இழப்பீடாகப் பெறுவதே அவர்களின் நோக்கம்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இதுவரை 20 சதவீதம் மின்சார கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு மேலும் 30 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அது நடந்தால் இன்னும் 02 வருடங்களில் இந்த நாட்டில் வீடொன்றின் மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணம் 1300 டொலர்களால் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தடைகளை பொருட்படுத்தாமல், ஒரு சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலியர்களுக்கான எரிசக்தி கட்டண பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் அல்பானீஸ் உறுதியளிக்கிறார்.

பெப்ரவரி மாதத்திற்குள் கட்டணத்தை குறைப்பதே தமது இலக்கு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சப்ளையர்களுக்கு பணம் செலுத்தும் தீர்மானத்தில் மத்திய மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

குறைந்த மின்கட்டணம் ஏற்படும் பட்சத்தில், உற்பத்தி செலவுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும்.

இதன் கீழ் 10 பில்லியன் டொலர் நிதியொன்று நிறுவப்படும் என மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு இன்று ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...