Cinemaபிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார் - திரையுலகினர் பலர்...

பிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார் – திரையுலகினர் பலர் இரங்கல்.

-

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7ம் திகதி காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயணமூர்த்தி. இவர் மறைந்த நடிகரும், இயக்குநருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக பூந்தோட்டம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேல் கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து நகைச்சுவை நடிகனாக அறியபட்டவர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களுடன் 200இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவ நாராயணன் காலமானதை அடுத்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நன்றி தமிழன்

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...