Sportsநெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா - FIFA உலகக்கிண்ணம்

நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா – FIFA உலகக்கிண்ணம்

-

கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நள்ளிரவு லுசைல் உதைபந்து மைதானத்தில் தொடங்கிய 2வது கால் இறுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின், 35-வது நிமிடத்தில்அர்ஜெண்டினா வீரர் மொலினா முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

2 வது பகுதியின் 73-வது நிமிடத்தில் லியோனர் மெஸ்ஸி அர் ஜென்டினாவுக்கான 2-வது கோலை அடித்தார். இதனால் வெற்றி அர்ஜென்டினா பக்கம் இருந்தது. எனினும் நெதர்லாந்து வீரர் வெக்ஹோர்ஸ்ட் 83 வது நிமிடத்தில் தமது அணிக்காக முதல் கோலை அடித்தார். தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போது 11 நிமிடங்களில் அவரே இரண்டாவது கோலை அடித்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முட்டுக் கட்டை போட்டார்.

கூடுதல் நேர ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜெண்டினா 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

நன்றி தமிழன்

Latest news

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்த இணையும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள்

Utta பல்கலைக்கழகத்தில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க பழமைவாத வர்ணனையாளர் சார்லி கிர்க்கிற்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது சார்லி கிர்க்கின்...

“வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு” – த.வெ.க. தலைவர் விஜய்

‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவா் விஜய் கேள்வி...