Articleஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

-

ஆஸ்திரேலியாவில் ஏற்படுகின்ற காட்டுத்தீயானது விரைவாகப் பரவி, உயிரிழப்பு உட்பட பரவலான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. தீ தொடங்கும் போது, சூழ்நிலையைப் பொறுத்து, பல்வேறு நிலைகளில் எச்சரிக்கைகள் வழங்கப்படலாம் என்பதால் அவற்றுக்கு கவனம்செலுத்துங்கள்

நீங்கள் காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், இதைப் புரிந்துகொண்டு ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் புதர் நிலமொன்றில் அல்லது அதற்கு அருகில் வசிப்பவராக இருந்தால், தீயினால் பாதிக்கப்படும் அபாயம் நிச்சயம் உள்ளது.

தீ ஆரம்பிப்பதற்கும், நமக்கு நிறைய சவால்கள் ஏற்படுவதற்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்,வெப்பமான மற்றும் வறண்ட நிலைமைகள் ஆகும். இவை தீ தொடங்குவதை மிகவும் எளிதாக்கும்.

அதற்கு அடுத்தது காற்று. பலத்த காற்று வீசும்போது, தீ பரவுவது எளிதாகிறது. காட்டுத்தீ அபாயம் அதிகமுள்ளபோது தீயணைப்பு துறையினர் தீ மூட்டுவதற்கான தடையை விதிக்கின்றனர்.

இத்தடை நடைமுறையில் இருக்கும் போது, தீயை உண்டாக்கும் எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது. தீ தொடங்கும் போது, சூழ்நிலையைப் பொறுத்து, பல்வேறு நிலைகளில் எச்சரிக்கைகள் வழங்கப்படலாம்.

அடிப்படை நிலை ஒரு ‘அறிவுறுத்தல்’ ஆகும். ‘அறிவுறுத்தல்’ என்பதன் அர்த்தம் உங்கள் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதால், நீங்கள் விழிப்புடன் இருந்து சுற்றுப்புறங்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது நிலை ‘கண்காணித்தல் மற்றும் செயற்படல்’. கண்காணித்தல் மற்றும் செயற்படல்’ என்பது நீங்கள் தப்பிப்பிழைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

போதிய தயார்ப்படுத்தல்களுடன் இருந்தால் அங்கேயே தங்கியிருந்து உங்கள் சொத்தைப் பாதுகாக்கலாம், அல்லது அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லலாம் என்பதே இதன் பொருள்.

எம்மிடம் உள்ள அதியுச்ச எச்சரிக்கை ‘அவசரகால எச்சரிக்கை’.மக்களின் உயிருக்கோ சொத்துக்களுக்கோ நேரடி அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பாக தங்கியிருப்பதன் மூலம்

அல்லது அங்கிருந்து வெளியேறுவதன் மூலம், மக்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள உடனடியாக செயற்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

பொதுவாக எச்சரிக்கை வழங்கப்படும்போது சில தெளிவான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படும்.

மின்னல் போன்ற இயற்கையான காரணங்களினாலோ அல்லது விபத்தாலோ காட்டுத்தீ தொடங்கலாம். சில சமயங்களில், அவை வேண்டுமென்றே தொடங்கப்படுகின்றன.

நீங்கள் காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் தீயணைப்பு திட்டமொன்றை வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இதற்குத் தயாராவதற்கு மக்கள் தமக்கிருக்கும் அபாயங்களை அறிந்து கொள்ளவேண்டும்- குறிப்பாக காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

பின்னர் அதிலிருந்து தப்புவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் பேசலாம் அல்லது புதர் நிலத்திற்கு அருகில் நீங்கள் வேலை செய்தால், ஒரு திட்டத்தை வைத்திருக்கலாம்.

உங்களுக்கு அருகில் ஒரு காட்டுத்தீ ஆரம்பித்தால் நீங்கள் அங்கிருந்து வெளியேறப் போகிறீர்கள் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு வைத்து அங்கிருந்து நீங்கள் சீக்கிரமாகவே புறப்படலாம்.

அல்லது நீங்கள் தயாராகவிருந்தால் அங்கேயே தங்கியிருந்து உங்கள் சொத்துக்களை பாதுகாக்கலாம்.

மக்கள் அங்கேயே தங்கியிருந்து தமது சொத்துக்களைப் பாதுகாக்கப் போகிறார்கள் என்றால், தீயை அணைக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன நடக்கப் போகிறது என்பது மட்டுமல்லாமல், தண்ணீர் விநியோகம் உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் மிகவும் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் இது மிகவும் சவாலான சூழ்நிலையாக இருக்கும்.

காட்டுத்தீ அபாயமுள்ள காலப்பகுதி ஆரம்பிக்க முன்னரேயே அது குறித்த திட்டமிடல்களை நீங்கள் தொடங்க வேண்டும்.

அதிக அச்சுறுத்தலான காலத்திற்கு முன்பு, குறிப்பாக கோடைகாலத்திற்கு முன்பு, மக்கள் தங்கள் வீட்டையும் சொத்துக்களையும் தயார் செய்வது மிகவும் முக்கியம்.

உதாரணமாக புற்களை வெட்டலாம் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்கலாம்.

மற்றும் அவர்களது உள்ளூராட்சி சபையைத் தொடர்புகொள்ளலாம். தீ ஆபத்தை தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளூராட்சி சபையிடம் இருக்கும். அவற்றைத் தெரிந்துகொள்வதுடன் அவற்றுக்கு இணங்கி நடப்பதும் மிகவும் முக்கியம்.

ஒரு காணி அல்லது வீட்டைச் சுற்றி 20 மீட்டர் பாதுகாப்பு வலயத்தை அமைக்கலாம். எரிபொருளை முடிந்தவரை குறைவாக வைத்திருக்கலாம். Reticulated garden beds மற்றும் அது போன்ற எளிதில் தீப்பற்ற முடியாத விடயங்கள் அந்த பகுதியில் மிகவும் முக்கியம். இவை கோடைக்கு முன் செய்யப்பட வேண்டும்(அதாவது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்)

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...