Articleஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

ஆஸ்திரேலியாவில் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

-

ஆஸ்திரேலியாவில் ஏற்படுகின்ற காட்டுத்தீயானது விரைவாகப் பரவி, உயிரிழப்பு உட்பட பரவலான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. தீ தொடங்கும் போது, சூழ்நிலையைப் பொறுத்து, பல்வேறு நிலைகளில் எச்சரிக்கைகள் வழங்கப்படலாம் என்பதால் அவற்றுக்கு கவனம்செலுத்துங்கள்

நீங்கள் காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், இதைப் புரிந்துகொண்டு ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

நீங்கள் புதர் நிலமொன்றில் அல்லது அதற்கு அருகில் வசிப்பவராக இருந்தால், தீயினால் பாதிக்கப்படும் அபாயம் நிச்சயம் உள்ளது.

தீ ஆரம்பிப்பதற்கும், நமக்கு நிறைய சவால்கள் ஏற்படுவதற்கும் முக்கியமான இரண்டு காரணங்கள்,வெப்பமான மற்றும் வறண்ட நிலைமைகள் ஆகும். இவை தீ தொடங்குவதை மிகவும் எளிதாக்கும்.

அதற்கு அடுத்தது காற்று. பலத்த காற்று வீசும்போது, தீ பரவுவது எளிதாகிறது. காட்டுத்தீ அபாயம் அதிகமுள்ளபோது தீயணைப்பு துறையினர் தீ மூட்டுவதற்கான தடையை விதிக்கின்றனர்.

இத்தடை நடைமுறையில் இருக்கும் போது, தீயை உண்டாக்கும் எந்த நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது. தீ தொடங்கும் போது, சூழ்நிலையைப் பொறுத்து, பல்வேறு நிலைகளில் எச்சரிக்கைகள் வழங்கப்படலாம்.

அடிப்படை நிலை ஒரு ‘அறிவுறுத்தல்’ ஆகும். ‘அறிவுறுத்தல்’ என்பதன் அர்த்தம் உங்கள் பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதால், நீங்கள் விழிப்புடன் இருந்து சுற்றுப்புறங்களைக் கண்காணிக்க வேண்டும் என்பதாகும்.

இரண்டாவது நிலை ‘கண்காணித்தல் மற்றும் செயற்படல்’. கண்காணித்தல் மற்றும் செயற்படல்’ என்பது நீங்கள் தப்பிப்பிழைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

போதிய தயார்ப்படுத்தல்களுடன் இருந்தால் அங்கேயே தங்கியிருந்து உங்கள் சொத்தைப் பாதுகாக்கலாம், அல்லது அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் செல்லலாம் என்பதே இதன் பொருள்.

எம்மிடம் உள்ள அதியுச்ச எச்சரிக்கை ‘அவசரகால எச்சரிக்கை’.மக்களின் உயிருக்கோ சொத்துக்களுக்கோ நேரடி அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பாக தங்கியிருப்பதன் மூலம்

அல்லது அங்கிருந்து வெளியேறுவதன் மூலம், மக்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள உடனடியாக செயற்பட வேண்டும் என்பதே இதன் பொருள்.

பொதுவாக எச்சரிக்கை வழங்கப்படும்போது சில தெளிவான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்படும்.

மின்னல் போன்ற இயற்கையான காரணங்களினாலோ அல்லது விபத்தாலோ காட்டுத்தீ தொடங்கலாம். சில சமயங்களில், அவை வேண்டுமென்றே தொடங்கப்படுகின்றன.

நீங்கள் காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால் தீயணைப்பு திட்டமொன்றை வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இதற்குத் தயாராவதற்கு மக்கள் தமக்கிருக்கும் அபாயங்களை அறிந்து கொள்ளவேண்டும்- குறிப்பாக காட்டுத்தீ அபாயமுள்ள பகுதியில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

பின்னர் அதிலிருந்து தப்புவதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் பேசலாம் அல்லது புதர் நிலத்திற்கு அருகில் நீங்கள் வேலை செய்தால், ஒரு திட்டத்தை வைத்திருக்கலாம்.

உங்களுக்கு அருகில் ஒரு காட்டுத்தீ ஆரம்பித்தால் நீங்கள் அங்கிருந்து வெளியேறப் போகிறீர்கள் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு வைத்து அங்கிருந்து நீங்கள் சீக்கிரமாகவே புறப்படலாம்.

அல்லது நீங்கள் தயாராகவிருந்தால் அங்கேயே தங்கியிருந்து உங்கள் சொத்துக்களை பாதுகாக்கலாம்.

மக்கள் அங்கேயே தங்கியிருந்து தமது சொத்துக்களைப் பாதுகாக்கப் போகிறார்கள் என்றால், தீயை அணைக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன நடக்கப் போகிறது என்பது மட்டுமல்லாமல், தண்ணீர் விநியோகம் உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் மிகவும் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் இது மிகவும் சவாலான சூழ்நிலையாக இருக்கும்.

காட்டுத்தீ அபாயமுள்ள காலப்பகுதி ஆரம்பிக்க முன்னரேயே அது குறித்த திட்டமிடல்களை நீங்கள் தொடங்க வேண்டும்.

அதிக அச்சுறுத்தலான காலத்திற்கு முன்பு, குறிப்பாக கோடைகாலத்திற்கு முன்பு, மக்கள் தங்கள் வீட்டையும் சொத்துக்களையும் தயார் செய்வது மிகவும் முக்கியம்.

உதாரணமாக புற்களை வெட்டலாம் மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களை முடிந்தவரை குறைவாக வைத்திருக்கலாம்.

மற்றும் அவர்களது உள்ளூராட்சி சபையைத் தொடர்புகொள்ளலாம். தீ ஆபத்தை தடுப்பதற்கான அல்லது குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் உள்ளூராட்சி சபையிடம் இருக்கும். அவற்றைத் தெரிந்துகொள்வதுடன் அவற்றுக்கு இணங்கி நடப்பதும் மிகவும் முக்கியம்.

ஒரு காணி அல்லது வீட்டைச் சுற்றி 20 மீட்டர் பாதுகாப்பு வலயத்தை அமைக்கலாம். எரிபொருளை முடிந்தவரை குறைவாக வைத்திருக்கலாம். Reticulated garden beds மற்றும் அது போன்ற எளிதில் தீப்பற்ற முடியாத விடயங்கள் அந்த பகுதியில் மிகவும் முக்கியம். இவை கோடைக்கு முன் செய்யப்பட வேண்டும்(அதாவது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்)

Latest news

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...

வடக்கு NSW மாநிலத்தில் அதிகரித்துள்ள பனிப்பொழிவு 

வடக்கு நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகள் மழை மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. Coffs துறைமுகத்திற்கு மேற்கே...

Sturt நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

தெற்கு நியூ சவுத் வேல்ஸில் மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒரு பெரிய நெடுஞ்சாலையும் மணிக்கணக்கில் மூடப்பட்டது. வெள்ளிக்கிழமை நண்பகல், வாகா வாகாவிலிருந்து...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

மீண்டும் வெடித்த இந்தோனேசியாவின் Lewotobi Laki-Laki மலை

இந்தோனேசியாவின் Mount Lewotobi Laki-laki வெடித்து, 10 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு சாம்பல் மேகத்தை வானத்தில் கக்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8:48 மணிக்கு எரிமலை...

இஸ்ரேலிய அதிகாரிகளின் மிருகத்தனமான நடத்தையை விவரித்த காசாவிற்கு உதவி பெற்ற ஆஸ்திரேலியர்கள்

காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த இரண்டு ஆஸ்திரேலிய குடிமக்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர் நேற்று காலை சிட்னிக்குத் திரும்பினர். இஸ்ரேலிய...