Breaking NewsTwitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு - Elon Musk எடுத்த அதிரடி...

Twitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு – Elon Musk எடுத்த அதிரடி முடிவுகள்

-

ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட சிவில், மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குழு நேற்று முன்தினம் இரவு ட்விட்டர் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக மின்னஞ்சல் மூலம் ட்விட்டர் அந்த குழுவுக்கு தெரியப்படுத்தியது.

பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “ட்விட்டரை பாதுகாப்பான தகவல் தரும் இடமாக மாற்றுவதற்கான எங்கள் பணி முன்னெப்போதையும் விட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் நகரும். மேலும் இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த உங்கள் யோசனைகளை நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

நிர்வாணமாக தூங்குவதால் கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

நிர்வாணமாக தூங்குவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகளை ஒரு உயர் மருத்துவர் வெளிப்படுத்தியுள்ளார். Buff லைனில் தூங்குவது சிறந்த இரவு தூக்கத்தை அளிப்பதாகவும், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின்...

பிரதமர் அல்பானீஸை சந்தித்தார் ஜனாதிபதி டிரம்ப்

கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் குறித்து பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் பேசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்...

விமானங்களில் Power bank-களுக்கு தடை!

பிரிட்டிஷ் பயணிகள் தங்கள் பொருட்களில் பவர் பேங்குகளை வைக்க வேண்டாம் என்று இங்கிலாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. ஏனென்றால், பழுதடைந்த, தவறாகப் பயன்படுத்தப்பட்ட லித்தியம்...

ஆஸ்திரேலிய தேர்தலில் 4 மில்லியனைத் தாண்டிய வாக்காளர்கள்

முந்தைய தேர்தல்களை விட ஆஸ்திரேலியர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 4.03 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில்,...

விமானங்களில் Power bank-களுக்கு தடை!

பிரிட்டிஷ் பயணிகள் தங்கள் பொருட்களில் பவர் பேங்குகளை வைக்க வேண்டாம் என்று இங்கிலாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்துள்ளது. ஏனென்றால், பழுதடைந்த, தவறாகப் பயன்படுத்தப்பட்ட லித்தியம்...

ஆஸ்திரேலிய தேர்தலில் 4 மில்லியனைத் தாண்டிய வாக்காளர்கள்

முந்தைய தேர்தல்களை விட ஆஸ்திரேலியர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 4.03 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில்,...