Breaking NewsTwitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு - Elon Musk எடுத்த அதிரடி...

Twitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு – Elon Musk எடுத்த அதிரடி முடிவுகள்

-

ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட சிவில், மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குழு நேற்று முன்தினம் இரவு ட்விட்டர் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக மின்னஞ்சல் மூலம் ட்விட்டர் அந்த குழுவுக்கு தெரியப்படுத்தியது.

பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “ட்விட்டரை பாதுகாப்பான தகவல் தரும் இடமாக மாற்றுவதற்கான எங்கள் பணி முன்னெப்போதையும் விட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் நகரும். மேலும் இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த உங்கள் யோசனைகளை நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...