Breaking NewsTwitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு - Elon Musk எடுத்த அதிரடி...

Twitter-ன் பாதுகாப்பு குழு கலைப்பு – Elon Musk எடுத்த அதிரடி முடிவுகள்

-

ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட சிவில், மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த குழு நேற்று முன்தினம் இரவு ட்விட்டர் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக மின்னஞ்சல் மூலம் ட்விட்டர் அந்த குழுவுக்கு தெரியப்படுத்தியது.

பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “ட்விட்டரை பாதுகாப்பான தகவல் தரும் இடமாக மாற்றுவதற்கான எங்கள் பணி முன்னெப்போதையும் விட வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் நகரும். மேலும் இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த உங்கள் யோசனைகளை நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...

ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சார சமூகங்களுக்கு அல்பானீஸ் முறையீடு

உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் தற்போது நிகழும் இன மற்றும் மத மோதல்களைப் போல ஆஸ்திரேலியாவில் பல கலாச்சார சமூகங்கள் உருவாக்க வேண்டாம் என்று பிரதமர்...

குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பற்றி நற்செய்தி

மத்திய அரசு, ஓய்வூதிய வரி விதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் புதிய கொள்கைகளின் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்தப் புதிய முடிவின் கீழ், அடையப்படாத ஆதாயங்களுக்கு வரி விதிக்கும்...

சிட்னியில் ஒரு பல் மருத்துவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு என சந்தேகம்!

சிட்னியில் உள்ள ஒரு பல் மருத்துவர் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரங்களைப் பின்பற்றத் தவறியதால் ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இதன் விளைவாக, இந்த மருத்துவரிடம் சிகிச்சை...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றம்

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட Fiji நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதை அடுத்து பெரும் சர்ச்சை...