Businessநியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

நியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

-

நியூசிலாந்து அரசாங்கம் பல குடியேற்ற சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மாற்றத்தின் கீழ், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்கள் குடியேற்ற பசுமை பட்டியலில் (Immigration Green list) சேர்க்கப்படுவார்கள்.

அந்த தொழிலாளர்களுக்கு விரைவில் நியூசிலாந்து நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை, மருத்துவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்ட நிலையில், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த புதிய குடிவரவு சட்ட மாற்றத்தின் மூலம் ட்ரக் சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளும் தற்காலிக நியூசிலாந்து வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்ற சட்ட மாற்றத்தில் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ மெக்கானிக்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் குடிவரவு பசுமை பட்டியலில் (Immigration Green list) 10 வேலைத் துறைகளை சேர்க்க நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...