Businessநியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

நியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

-

நியூசிலாந்து அரசாங்கம் பல குடியேற்ற சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மாற்றத்தின் கீழ், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்கள் குடியேற்ற பசுமை பட்டியலில் (Immigration Green list) சேர்க்கப்படுவார்கள்.

அந்த தொழிலாளர்களுக்கு விரைவில் நியூசிலாந்து நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை, மருத்துவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்ட நிலையில், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த புதிய குடிவரவு சட்ட மாற்றத்தின் மூலம் ட்ரக் சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளும் தற்காலிக நியூசிலாந்து வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்ற சட்ட மாற்றத்தில் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ மெக்கானிக்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் குடிவரவு பசுமை பட்டியலில் (Immigration Green list) 10 வேலைத் துறைகளை சேர்க்க நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...