Cinemaதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்!

-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “ஜெயிலர்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ரஜினியின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுப்பொழிவுடன் வெளியிடப்பட்ட பாபா திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு திருமலை திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த ரஜினிக்கு திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கூடிய ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு ரஜினி அழைத்து செல்லப்பட்டார்.

இன்று அதிகாலை தனது மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

ரஜினியின் வருகையால் ரசிகர்கள் கூடியதால், நேற்று இரவு முதல் அதிகாலை வரை திருப்பதி பரபரப்புடன் காணப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

பிரபல நாட்டில் நாய்களுக்கு பொருத்தப்படும் Microchip

தென்னிந்திய நகரமான சென்னையில் உள்ள குடிமை அமைப்பு தெரு நாய்களுக்கு மைக்ரோசிப்களைப் பொருத்தத் தொடங்கியுள்ளது. வெறிநாய்க்கடி தடுப்பூசியை கண்காணிக்கவும், பிறப்பு கட்டுப்பாட்டு சிகிச்சையை வழங்கவும் இந்த நடவடிக்கை...

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன்

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். 20 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும்...

சாதனை அளவை எட்டியுள்ள அமெரிக்க முட்டை விலைகள்

கடந்த மாதம், அமெரிக்க முட்டை விலைகள் மீண்டும் ஒரு டசனுக்கு US$6.23 (A$10) என்ற புதிய சாதனை அளவை எட்டின. மொத்த விலைகள் குறைந்து, பறவைக் காய்ச்சல்...

வடக்கு ஆஸ்திரேலியா அருகே மையம் கொண்டுள்ள இரு வெப்பமண்டல சூறாவளிகள்

ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் நாட்டில் கடுமையான வானிலை நிலவும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். அரபுரா கடலில்...

IVF மருத்துவமனை செய்த தவறு – மன்னிப்பு கேட்ட மருத்துவர்கள்

ஆஸ்திரேலியாவின் முன்னணி IVF மருத்துவமனையில் நடந்த ஒரு பெரிய தவறுக்குப் பிறகு, ஒரு பெண் தெரியாமல் மற்றொரு தம்பதியினரின் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது மோனாஷ் IVF இன்...

விக்டோரியாவில் தாயை 98 முறை குத்திய மகன் – நீதிமன்றம் விதித்த தீர்ப்பு

தனது தாயைக் கொலை செய்ததற்காக 17 வயது சிறுவனுக்கு விக்டோரியா உச்ச நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க உள்ளது. 2023 ஆம் ஆண்டில், இந்த இளைஞன்...