Breaking Newsஒவ்வொரு ஊழியர்களுக்கு $100,000 கிறிஸ்மஸ் போனஸ் வழங்கிய ஆஸ்திரேலிய பெண் தொழிலதிபர்...

ஒவ்வொரு ஊழியர்களுக்கு $100,000 கிறிஸ்மஸ் போனஸ் வழங்கிய ஆஸ்திரேலிய பெண் தொழிலதிபர் – வியப்பில் ஊழியர்கள்!

-

சர்வதேச அளவில் உள்ள நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இருக்கும் வேலை என்னவாகுமோ என்ற கவலையே ஊழியர்கள் மத்தியில் பெரும்பாலும் இருந்து வருகின்றது.

ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளது. கிறிஸ்துமஸ் போனஸ் ஆக $100,000 கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Roy Hill என்ற நிறுவனத்தினை Gina Rinehart என்ற பெண் நடத்தி வருகின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வரும் Roy Hill, கணிசமான லாபத்தினையும் கொடுத்து வந்துள்ளது. இதற்கிடையில் தன்னுடன் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் $100,000 போனஸ் ஆக கொடுத்துள்ளார் ஜினா ரைன்ஹார்ட்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டினை ஒட்டி இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட 10 ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் வாரி வழங்கியுள்ளார் இந்த பெண் தொழிலதிபர். கடந்த ஆண்டில் Roy Hill நிறுவனம் இந்த சவாலான காலகட்டத்திலும் 3.3 பில்லியன் டாலர் லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆன ஆப்பிள்,மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர், சிஸ்கோ என பல நிறுவனங்களும், மந்த நிலையை காரணம் காட்டி பணி நீக்கம் செய்து வருகின்றன. செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ஆனால் Roy Hill ஜாம்பவான்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில், ஊழியர்களுக்கு போனஸினை வாரி வழங்கியுள்ளது. இது மற்ற நிறுவனங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு Seek-இன் தரவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சுகாதாரம்,...

ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இலவச வாய்ப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக வந்திறங்கிய திறமையான புலம்பெயர்ந்தோருக்கான அறிமுக நிகழ்ச்சியை நடத்த மாநில அரசு தயாராகி வருகிறது. அதன்படி, தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய புதிய குடியேற்றவாசிகளுக்கு...

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...