Breaking Newsஒவ்வொரு ஊழியர்களுக்கு $100,000 கிறிஸ்மஸ் போனஸ் வழங்கிய ஆஸ்திரேலிய பெண் தொழிலதிபர்...

ஒவ்வொரு ஊழியர்களுக்கு $100,000 கிறிஸ்மஸ் போனஸ் வழங்கிய ஆஸ்திரேலிய பெண் தொழிலதிபர் – வியப்பில் ஊழியர்கள்!

-

சர்வதேச அளவில் உள்ள நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இருக்கும் வேலை என்னவாகுமோ என்ற கவலையே ஊழியர்கள் மத்தியில் பெரும்பாலும் இருந்து வருகின்றது.

ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளது. கிறிஸ்துமஸ் போனஸ் ஆக $100,000 கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Roy Hill என்ற நிறுவனத்தினை Gina Rinehart என்ற பெண் நடத்தி வருகின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வரும் Roy Hill, கணிசமான லாபத்தினையும் கொடுத்து வந்துள்ளது. இதற்கிடையில் தன்னுடன் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் $100,000 போனஸ் ஆக கொடுத்துள்ளார் ஜினா ரைன்ஹார்ட்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டினை ஒட்டி இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட 10 ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் வாரி வழங்கியுள்ளார் இந்த பெண் தொழிலதிபர். கடந்த ஆண்டில் Roy Hill நிறுவனம் இந்த சவாலான காலகட்டத்திலும் 3.3 பில்லியன் டாலர் லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆன ஆப்பிள்,மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர், சிஸ்கோ என பல நிறுவனங்களும், மந்த நிலையை காரணம் காட்டி பணி நீக்கம் செய்து வருகின்றன. செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ஆனால் Roy Hill ஜாம்பவான்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில், ஊழியர்களுக்கு போனஸினை வாரி வழங்கியுள்ளது. இது மற்ற நிறுவனங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...