Breaking Newsஒவ்வொரு ஊழியர்களுக்கு $100,000 கிறிஸ்மஸ் போனஸ் வழங்கிய ஆஸ்திரேலிய பெண் தொழிலதிபர்...

ஒவ்வொரு ஊழியர்களுக்கு $100,000 கிறிஸ்மஸ் போனஸ் வழங்கிய ஆஸ்திரேலிய பெண் தொழிலதிபர் – வியப்பில் ஊழியர்கள்!

-

சர்வதேச அளவில் உள்ள நிறுவனங்களில் பணி நீக்கம் என்பது விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இருக்கும் வேலை என்னவாகுமோ என்ற கவலையே ஊழியர்கள் மத்தியில் பெரும்பாலும் இருந்து வருகின்றது.

ஆஸ்திரேலியா நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளது. கிறிஸ்துமஸ் போனஸ் ஆக $100,000 கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Roy Hill என்ற நிறுவனத்தினை Gina Rinehart என்ற பெண் நடத்தி வருகின்றார்.

கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வரும் Roy Hill, கணிசமான லாபத்தினையும் கொடுத்து வந்துள்ளது. இதற்கிடையில் தன்னுடன் பணியாற்றும் 10 ஊழியர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் $100,000 போனஸ் ஆக கொடுத்துள்ளார் ஜினா ரைன்ஹார்ட்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டினை ஒட்டி இந்த அறிவிப்பு வந்துள்ள நிலையில், இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட 10 ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் வாரி வழங்கியுள்ளார் இந்த பெண் தொழிலதிபர். கடந்த ஆண்டில் Roy Hill நிறுவனம் இந்த சவாலான காலகட்டத்திலும் 3.3 பில்லியன் டாலர் லாபம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உலகின் டெக் ஜாம்பவான்கள் ஆன ஆப்பிள்,மைக்ரோசாப்ட், மெட்டா, ட்விட்டர், சிஸ்கோ என பல நிறுவனங்களும், மந்த நிலையை காரணம் காட்டி பணி நீக்கம் செய்து வருகின்றன. செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

ஆனால் Roy Hill ஜாம்பவான்களுக்கெல்லாம் சவால் விடும் வகையில், ஊழியர்களுக்கு போனஸினை வாரி வழங்கியுள்ளது. இது மற்ற நிறுவனங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...