Breaking Newsகுயின்ஸ்லாந்தில் முதியோர் பராமரிப்பு மையங்களுக்கு வருபவர்களுக்கு விசேட அறிவித்தல்!

குயின்ஸ்லாந்தில் முதியோர் பராமரிப்பு மையங்களுக்கு வருபவர்களுக்கு விசேட அறிவித்தல்!

-

குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை, கோவிட் அறிகுறிகளைக் கொண்ட எவரும் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையைப் பார்க்க முதியோர் பராமரிப்பு மையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.

காரணம், மாநிலத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்து 14,941 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய வாரத்தில் 15 கோவிட் இறப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், கடந்த வாரத்தில் அது 33 ஆக அதிகரித்துள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் முதியோர் பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...