Breaking Newsஅவுஸ்திரேலிய ஆசிரியர்களுக்கு சம்பளம் $ 130,000 வரை உயர்வடையுமா?

அவுஸ்திரேலிய ஆசிரியர்களுக்கு சம்பளம் $ 130,000 வரை உயர்வடையுமா?

-

அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்க மாநில கல்வி அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

கான்பரா நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளார்க்குடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆசிரியர்கள் ஆற்றும் பணி தொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் போதுமானதாக இல்லை என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க கல்வி அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 4000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் அதற்கான தீர்வுகள் உடனடியாகக் காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தேச புதிய சம்பள முறையின்படி, ஆசிரியரின் வருடாந்த சம்பளம் சுமார் 130,000 டொலர்களாக அதிகரிக்கும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...