Breaking Newsஉலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றது ஆர்ஜென்டினா - FIFA உலகக்கிண்ணம்

உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றது ஆர்ஜென்டினா – FIFA உலகக்கிண்ணம்

-

உலக காற்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த FIFA காற்பந்து தொடரின் இறுதிப் போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

பலம் வாய்ந்த பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிந்தன.

இந்தப் போட்டியில் இதில் ஆர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த பிரான்ஸை 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி 3ஆவது முறையாக உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

போட்டியின் 23ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டினாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெசி அழகான கோலாக மாற்றினார்.

ஆர்ஜென்டினாவின் மரியா 36ஆவது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் பெற்று முதல் பாதியிலேயே ஆர்ஜென்டினா ஆதிக்கம் பெற்றது.

பின்னர் இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappé 80 மற்றும் 81ஆவது நிமிடங்களில் அபாரமான இரு கோல்களைப் பெற்று மீண்டும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்.

இறுதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல்களைப் பெற்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

இதில், ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெசி 108ஆவது நிமிடத்தில் அபாரமாக கோல் ஒன்றைப் பெற்றதோடு,பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 118ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலமாக கோல் ஒன்றைப் பெற்று மீண்டும் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

இதனையடுத்து, போட்டியின் வெற்றியை தீர்மானிப்பதற்காக இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஆர்ஜென்டினா அணி பலம் வாய்ந்த பிரான்ஸை 4-2 (பெனால்டி) கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியமை விசேட அம்சமாகும்.

இறுதியாக ஆர்ஜென்டினா அணி 1978 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...