Cinema“அவதார் 2” படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் குறித்து வெளியான...

“அவதார் 2” படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் குறித்து வெளியான தகவல்.

-

அவதார் 2 படத்தின் முதல் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.

25 கோடி அமெரிக்க டொலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் டிசம்பர் 16 ஆம் திகதி வெளியானது.

மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், அவதார் 2 வெளியான 3 நாள்களில் உலகளவில் இதுவரை 3,500 கோடி ரூபாவையும், இந்தியாவில் 160 கோடி ரூபாவையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...