Newsபதவி விலகுவதாக அறிவித்தார் எலோன் மஸ்க்!

பதவி விலகுவதாக அறிவித்தார் எலோன் மஸ்க்!

-

பொருத்தமான ஒருவரை கண்டறிந்த பின்னர், ட்விட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகவுள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

தான் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து எலோன் மஸ்க் தமது ட்விட்டர் கணக்கினூடாக கருத்து கணிப்பொன்றை நடத்தினார்.

”கருத்துக் கணிப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்” என்று மஸ்க் கூறினார்.

அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 57.5% வாக்குகள் மஸ்க பதவி விலக வேண்டும் என்றும், 42.5% வாக்குகள் பதவி விலகும் யோசனைக்கு எதிராகவும் அளிக்கப்பட்டன.

17.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த வாக்களிப்பில் பங்கேற்றனர்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் மேற்கொண்ட சில தீர்மானங்கள் பல்வேறு தரப்பினரையும், போட்டி சமூக ஊடக நிறுவனங்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையிலேயே, மஸ்க் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தார்.

கருத்துக் கணிப்பு முடிவினையடுத்து இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள இலோன் மஸ்க், ”பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரை நான் கண்டுபிடித்த பின்னர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுகிறேன். அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேர்வர் குழுக்களுக்கு தலைமையாக செயற்படுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

இஸ்ரேலிய ஜனாதிபதியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்து அல்பானீஸ் சிறப்பு அறிக்கை

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலியா பயணம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது முடிவை ஆதரித்துள்ளார். டிசம்பர் 14 ஆம் திகதி Bondi...

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...