Newsபதவி விலகுவதாக அறிவித்தார் எலோன் மஸ்க்!

பதவி விலகுவதாக அறிவித்தார் எலோன் மஸ்க்!

-

பொருத்தமான ஒருவரை கண்டறிந்த பின்னர், ட்விட்டர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகவுள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

தான் ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டுமா? என்பது குறித்து எலோன் மஸ்க் தமது ட்விட்டர் கணக்கினூடாக கருத்து கணிப்பொன்றை நடத்தினார்.

”கருத்துக் கணிப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன்” என்று மஸ்க் கூறினார்.

அதற்கமைய, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, 57.5% வாக்குகள் மஸ்க பதவி விலக வேண்டும் என்றும், 42.5% வாக்குகள் பதவி விலகும் யோசனைக்கு எதிராகவும் அளிக்கப்பட்டன.

17.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த வாக்களிப்பில் பங்கேற்றனர்.

உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் மேற்கொண்ட சில தீர்மானங்கள் பல்வேறு தரப்பினரையும், போட்டி சமூக ஊடக நிறுவனங்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையிலேயே, மஸ்க் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியிருந்தார்.

கருத்துக் கணிப்பு முடிவினையடுத்து இன்று காலை ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள இலோன் மஸ்க், ”பதவியை பொறுப்பேற்கும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரை நான் கண்டுபிடித்த பின்னர் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுகிறேன். அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேர்வர் குழுக்களுக்கு தலைமையாக செயற்படுவேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

விலையை உயர்த்தும் பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பல்பொருள் அங்காடிகள் விலையை உயர்த்துவதற்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று (30) அறிவித்தார். அது கான்பெராவில் அவரது தேர்தல்...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...