Breaking Newsமெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை!

மெல்போர்ன் குடியிருப்பாளர்களுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை!

-

ஹெல்த் விக்டோரியா, மெல்போர்ன் குடியிருப்பாளர்களை தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி மெல்பேர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்து நாடு திரும்பிய ஒருவருக்கு அம்மை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையே இதற்குக் காரணம்.

41 வயதான இந்த நபர் பல இடங்களுக்குச் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 12 – 13 மற்றும் 16 ஆகிய நாட்களில் பயணம் செய்த இடங்களின் பட்டியலை விக்டோரியா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்தவர்கள் உடனடியாக சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தோன்றிய 03-04 நாட்களுக்குள் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது அம்மை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள பெரியவர்கள் அதிக ஆபத்துள்ள குழுக்களாக கருதப்படுகிறார்கள்.

இந்த வருடத்தில் இதுவரை விக்டோரியாவில் கண்டறியப்பட்ட தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை 06 ஆகும்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...